கலை உலகில் மினிமலிஸ்ட் (Minimalist Movement) இயக்கம் உள்ளிட்ட ரக நவீனபிரிண்டிங் முறைகளுக்காக கொண்டாடப்படுபர், ஜரீனா ஹாஷ்மி  (Zarina Hashmi) பிறந்த நாளில் சிறப்பு கூகுள் டுடூல் வெளியிடப்பட்டுள்ளது. 


கூகுள் டூடுல்


வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள், சாதனையாளர்களின் பிறந்த நாள், உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் கூகுள் நிறுவனம் சிறப்பு டுடூல் வெளியிடுவது வழக்கம்.


யார் இந்த ஜரினா ஹாஷ்மி?


ஜரீனா ஹாஷ்யின் கலை வடிவமைப்புகள்,ஓவியம், சிலைகள், பிரிண்டிங் முறைகள் ஆகியவற்றிற்காக மிகவும் புகழ் பெற்றவர். அப்ஸ்ட்ராக்ட் (Abstract), ஜியோமென்ட்ரி (Geometric) ஆகிய இரண்டின் மூலம் அவர் உருவாக்கிய ஓவியங்கள் உள்ளிட்ட கலை படைப்புகள் நல்ல வரவேற்பை பெற்றது. பாரம்பரிய முறையில் இல்லாமல் புதிய சிந்தனைகளுடன் அவரது படைப்பு தனித்தன்மையுடன் இருக்கும். 


உத்தர பிரதேசத்தில் உள்ள அலிக்ரா என்ற சிறய நகரில், 1937-ல் ஜரீனா ஹாஷ்மி பிறந்தார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, ஜரீனாவும் அவரது நான்கு உடன்பிறப்புகளும் பெற்றோர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்தனர். ஆனால், சுதந்திர போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் ஜரீனாவின் குடும்பம் பாகிஸ்தானில் உள்ள கராச்சிருக்கு நகருக்கு குடியேறினர். 


ஹாஷ்மிக்கு 21-வயதில் திருமணம் நடைபெற்றது. அரசு பணியாளரை திருமணம் செய்துகொண்டதால் பேங்க்காக், பாரிஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, அங்குள்ள கலை மற்றும் பிரிண்டிங் தொழில்நுட்பம் உள்ளவற்றை பற்றி நிறைய தெரிந்து கொண்டார். அது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டார். அவரின் ஆர்வம் அவருடைய படைப்புகள் உலகம் பேசும் அளவுக்கு உயர்ந்த்து. 


1977-ல் ஹரீனா ஹாஷ்மி நியூயார்க் சென்றார்.அங்கு அவருக்கு கலை மீதிருந்த ஆர்வமும் அதன்மூலம் சமூகத்திற்கு பங்களிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டார். 'Heresies Collective’ என்ற பெண்ணிய இதழ் ஒன்றில் பணியாற்றினார். அதில், அவருடைய கலை படைப்புகளில் அரசியல், சமூக நீதி உள்ளிட்டவைகள் இடம்பெற்றிருந்தன. அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பு கிடைக்கும் வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும் ‘New York Feminist Art Institute' என்ற நிறுவத்தில் பேராசியராக பொறுப்பு வகித்தார். மகளிர் கலைஞர்களுக்கு இதன் மூலம் பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தார்.


1980- ல் "Dialectics of Isolation: An Exhibition of Third World Women Artists of the United States" என்ற தலைப்பில் கலை படைப்புகள் கண்காட்சி ஒன்றை நடத்தினார். இதன் மூலம் பெண் கலைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களை பதிவு செய்வதாக இருந்தது. 


இவருடைய ‘intaglio and woodcut prints’ முறைகள் மிகவும் பிரபலமடைந்தன. அதோடு, இந்த நவீன முறை அவருக்கு பெரும் அங்கீகாரத்தை பெற்று தந்தது.


இந்தியராக பிறந்தவர், தனது கலை படைப்புகளில் மூலம் சமூகநீதி கருத்துக்கள் இருப்பதை உறுதி செய்தார். இஸ்லாமிய நம்பிக்கை கொண்டராக இருந்தார். இவருடைய கலை படைப்புகளில் அது வெளிப்பட்டது. இவர் 2022-எப்ரல்-25 உயிரிழந்தார். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன் தீவிரம் அதிகரித்ததால் உயிரிழந்தார்.