கொரோனா தொற்று அதிவேகமாக பரவிவரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மே மாதம் 1-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு, ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் பதிவு செய்துகொள்ளலாம் என்னும் தகவல் வெளியான நிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.