Vishakapatnam Fire | விசாகப்பட்டினம் இந்துஸ்தான் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இயங்கிவரும் இந்துஸ்தான் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கரமான தீ விபத்து சற்றுமுன் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

Continues below advertisement

ஆந்திர மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று விசாகப்பட்டினம். இந்த நகரத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த நகரத்தில், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் கழகத்திற்கு சொந்தமான எண்ணெய் சுத்தகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ஆலையில் சில மணிநேரங்களுக்கு முன்பு திடீரென பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள மூன்றாவது யூனிட்டில்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தற்போது வரை 5 தீயணைப்பு வாகனங்கள் ஆலையில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் முயற்சியிலும், தீ பிற இடங்களுக்கு பரவாமல் இருப்பதற்கும் போராடி வருகின்றனர். மேலும், சில தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு சென்று கொண்டிருக்கின்றன.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அதே சமயத்தில், தீப்பிடித்த 3-வது யூனிட்டில் தொழிலாளர்கள் பலரும் உள்ளே இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரமான சத்தத்துடன் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அருகில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.  

Continues below advertisement