நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனவரி 18 ஆம் தேதி (இன்று) மாலை 4:30 மணிக்கு ஒரு முக்கிய பொருளாதார விவகாரம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றுகிறார். 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 


கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், ஆத்மநிர்பர் பாரத் அபியானின் கீழ் பல்வேறு துறைகளில் வழங்கப்பட இருக்கிறது. அதேபோல், இந்த பட்ஜெட் தாக்குதலில் பொருளாதார மீட்சியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தலாம் என்றும் தெரிகிறது.


 






அதேபோல், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை மேம்படுத்துதல், விவசாயம், வனவியல், மீன்பிடித்தல், தொழில் மற்றும் சேவைகள் போன்ற துறைகளுக்கு PLI திட்டத்தை அறிமுகப்படுத்த படலாம். இந்த ஆண்டும் அரசாங்கம் பற்றாக்குறை அளவைக் குறைத்தல், பொதுத்துறை நிறுவனங்களை விரைவுபடுத்துதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், ஆட்டோமொபைல்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைத்தல், விவசாயக் கடன் இலக்கை ரூ.18 லட்சம் கோடியாக உயர்த்துதல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 


இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) அரசு தனது நிதி இலக்கான ஜிடிபியில் 6.8 சதவீதத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும், 2025-26க்குள் பற்றாக்குறையை 4.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. எல்ஐசி, பிபிசிஎல் மற்றும் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விரைவுபடுத்தவும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சமூக மற்றும் பௌதீக உள்கட்டமைப்பை உருவாக்கவும் பயன்படுத்த வேண்டும் என்றும் தொழில் அமைப்பு பரிந்துரை செய்துள்ளனர். 




இந்த பட்ஜெட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். “இந்தியாவில் அறிவியல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதில் அரசாங்கம் சமீபத்திய ஆண்டுகளில் மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த படிநிலைகள் இந்தியாவில் இருந்து அதிக ஆராய்ச்சி வெளியீடு மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதில் பிரதிபலிக்கின்றன. இந்தியா தயாரித்த ஆராய்ச்சியின் தரத்திற்காக உலகளாவிய அங்கீகாரத்தை வேகமாகப் பெற்று வருகிறது.


NRF அமைப்பது போன்ற முன்முயற்சிகள் மூலம் அரசாங்கம் முன்னணியில் இருக்கும் அதே வேளையில், இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு, பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் R&Dக்கு நிதியளிக்க தனியார் துறை மற்றும் HNI களை அரசாங்கம் எவ்வாறு ஊக்குவிப்பது என்பதைப் பார்ப்பது நல்லது,” என்று அபிஷேக் கோயல், CEO மற்றும் இணை நிறுவனர், CACTUS என்று தகவல் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண