விடைத்தாளில், முதலில் கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு மோதி மாணவர்களுக்கு அறிவுறுத்தினாரா? என்ற கேள்வியொன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாஜக தலைவர் சுப்ரமணியன் சாமி.


மாணவர்களுக்கு தேர்வுகளும், அவை அளிக்கும் அழுத்தங்களும் உள்ளிட்டவற்றைக் குறித்து கலந்துரையாடல் ஒன்றை கடந்த 2018-ஆம் முதல் பிரதமர் மோதி நடத்திவருகிறார். பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற பெயரில் இந்த கருத்தரங்கம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று டெல்லியில் நடந்த 'பரிக்‌ஷா பே சார்ச்சா 2021' செஷனில் பேசினார் பிரதமர் மோடி. 


<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Did Modi advise students to take up answering tough questions first in an exam paper?</p>&mdash; Subramanian Swamy (@Swamy39) <a >April 11, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


மாணவர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கிய அவர் 'மாணவர்கள் விடைத்தாளில் முதலில் கடினமான கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும். மேலும் அதற்காக சற்று கூடுதல் நேரம் ஒதுக்கவேண்டும்.  ஏனென்றால் ஆரம்பத்தில் உங்கள் சிந்தனை புதிதாக இருக்கும் மேலும் கடினமான கேள்விகளை எதிர்கொள்வதற்கு அது உதவியாக இருக்கும்’ என்றும் கூறினார்.


<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A student should always try to attempt the difficult topic in the beginning and devote more time to it : PM <a >@narendramodi</a> at <a >#PPC2021</a> <a >#ExamWarriors</a></p>&mdash; MyGovIndia (@mygovindia) <a >April 7, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


பிரதமரின் இந்த கருத்து இணையத்தில் விவாதப்பொருளாக மாறியது, பொதுவாக கல்வியாளர்களும் பெற்றோர்களும் பிள்ளைகளை முதலில் எளிமையான கேள்விகளுக்கு பதிலளித்து பிறகு கடிமான கேள்விகளை கையாண்டால் சிறந்தமுறையில் தேர்வுகளை எழுதமுடியும் என்று கூறுவார்கள். ஆனால் பிரதமர் அதை அப்படியே மாற்றி சொல்கிறார் என்று கூறத்தொடங்கினர். இதனையடுத்து அந்த பதிவு பல முக்கிய தளங்களில் இருந்து நீக்கப்பட்டது. இருப்பினும் my gov india ட்விட்டர் கணக்கில் அந்த பதிவு இன்னும் நீக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில், தற்போது சுப்ரமணியம் சாமி 'பரிட்சைதாளில், முதலில் கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு மோடி மாணவர்களுக்கு அறிவுறுத்தினாரா?' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.