சாலையில் நடந்து செல்பவரின் மீது SUV ஜீப் ஒன்று அசால்டாக ஏறி செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் டெல்லியில் நடந்ததாக கூறப்படுகிறது.


டெல்லியின் ஜான்பாத் பகுதியில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது. பிஸியான சாலையில் சில கார்கள் வேகமாக வந்துகொண்டிருக்கின்றன. அப்போது வெறும் சாலைதானே என ஒருவர் வேகமாக சாலையைக் கடக்கிறார். அப்போது சாலையின் நடுவே சென்றுகொண்டிருந்த சிவப்பு நிற SUV தார் ஜீப் ஒன்று சடாரென திரும்பி சாலையில் ஓரத்தில் சென்றுகொண்டிருக்கும் நபர் மீது ஏறி இறங்கி செல்கிறது. 






விபத்து நடந்தும் கார் ஓட்டுநர் ஜீப்பை நிறுத்தவோ, அடிபட்டவரை சென்று பார்க்கவோ இல்லை. அந்த சிவப்பு நிற கார் நிறுகாமலேயே செல்கிறது. இந்த கோர விபத்து அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அங்கு வந்த போலீசார் பாதிக்கப்பட்ட நபரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விபத்தை ஏற்படுத்திய கார் யாருடையது? காரை ஓட்டியவர் யார்? இது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் எல்லாம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண