மருத்துவமனையில் அனுமதி:


கட்ந்த 3 தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஐதராபாத்தில் உள்ள கமினேனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.


மருத்துவர் கண்காணிப்பில் தீபிகா:






பின்னர் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், பின்பு தனியார் ஓட்டலில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.


படப்பிடிப்புக்கு திரும்பிய தீபிகா:


தற்போது உடல்நிலை முற்றிலும் பழைய நிலைக்கு திரும்பி, நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தீபிகா படுகோனே குழு தெரிவிக்கையில், தீபிகா படுகோன் ஏற்கனவே படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பி விட்டதாகவும், பிரபாஸுடன் புராஜெக்ட் K படப்பிடிப்பை தொடங்கி விட்டதாகவும் கூறியுள்ளனர்.






PROJECT K திரைப்படம்:


பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் PROJECT K படத்தின் படப்பிடிப்புக்காக, தீபிகா படுகோனே தற்போது ஐதராபாத்தில் உள்ளார். இந்த படம் தென்னிந்திய ஸ்டாருடன், அவரது முதல் படமாக பார்க்கப்படுகிறது. PROJECT K படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது தவிர, தீபிகா ஷாருக்கானின் பதான் மற்றும் ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர் ஆகியவற்றின் படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Also Read:T Rajendar Meet Kamalhassan: கமலுடன் சந்திப்பு.. அமெரிக்கா பறக்கும் டி.ஆர்..? வைரலாகும் புகைப்படம்..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண