மனைவியின் பெயரில் போட்ட இன்சுரன்ஸ் பணம் ரூ.1.90 கோடியை பெறுவதற்கு திட்டம் தீட்டிய கணவர், கூலிப்படை வைத்து மனைவியை கார் ஏற்றி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


ராஜஸ்தான் மாநிலத்தில் மனைவியின் பெயரில் போட்ட இன்சுரன்ஸ் பணம் ரூ.1.90 கோடியை பெறுவதற்கு திட்டம் தீட்டிய கணவன் கூலிப்படை வைத்து மனைவியை கார் ஏற்றி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கணவர் உட்பட  3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ராஜஸ்தான் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் மகேஷ் சந்த். இவர் 2015-ம் ஆண்டு ஷாலு தேவி என்பரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். திருமணமான இரண்டு ஆண்டுகளுக்கு பின் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஷாலு தனது மகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் 2019-ம் ஆண்டு கணவர் மீது ஷாலு குடும்ப வன்முறை புகாரும் கொடுத்துள்ளார்.


இந்நிலையில் கடந்த 5-ம் தேதி தனது சகோதரர் ராஜூவுடன் பைக்கில் அனுமன் கோயிலுக்கு சென்ற போது, பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் ஷாலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த ராஜு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை விபத்து வழக்காக கருதிய நிலையில், இதில் சந்தேகம் இருப்பதாக ஷாலுவின் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர்.


இதனால் மகேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதே நேரம் ஷாலுவிடம் தான் ஒன்று நினைத்துள்ளதாகவும் இது நிறைவேறினால் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து விடுவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்காக 11 நாட்கள் தொடர்ந்து அனுமன் கோயிலுக்கு செல்லும் படியும் அவர் லூவிடம் சொன்னதாக கூறப்படுகிறது.


இந்த விஷியத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார். அக்டோபர் 5-ஆம் தேதி வேண்டுதலுக்காக ஷாலு கோயிலுக்கு சென்றார். அப்போது. கூலிப்படையை சேர்ந்த முக்கேஷ் சிங் ரத்தோர், ராகேஷ் குமார், சோனு சிங் ஆகியோரிடம் ரு.10 லட்சம் தருவதாக கூறியுள்ளார். முதற்கட்டமாக ரூ.5.5 லட்சம் வழங்கி விபத்தை ஏற்படுத்த  மகேஷ்  முடிவெடுத்திருந்தார் . அன்று, ஷாலு வீட்டை விட்டு வெளியே வந்ததும் கூலிப்படைக்கு தகவல் தெரிவித்தார் மகேஷ். அப்போது அவர் நடந்து செல்லும் போது பின்னால் காரை ஏற்றி கூலிப்படையினர் கொலை செய்ததாக மகேஷ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். கூலிப்படையை சேர்ந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.




மேலும் படிக்க


Crime: சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு போதை ஊசி.. வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய டாக்டர்..!


"நான் ஒரு சைக்கோ கில்லர், ஜோ பைடனை பிடிக்கவில்லை…": கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியவருக்கு 33 மாதங்கள் சிறை!