அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் தவாங் பகுதியில் இந்திய ராணுவத்தின் சீட்டா ரக விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.











உத்தரக்காண்ட் பகுதியில் மலைப் பகுதிகளில் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவது வழக்கம். அந்தவகையில் நேற்று இரவு 50 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. உத்தரக்காண்ட் மாநிலத்தின் பவுரி கர்வால் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக பள்ளத்திற்குள் விழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் தற்போது வரை இந்த விபத்தில் சிக்கி 25 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உத்தரக்காண்ட் டிஜிபி அசோக் குமார், “பவுரி கர்வால் பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தற்போது வரை 21 பேரை மீட்டுள்ளனர். அத்துடன் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.