பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை செருப்பால் அடித்த காரணத்துக்காக மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.  குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கிராமத்தின் தலைவர்.

Continues below advertisement

இந்த சம்பவம் சுமார் பதினைந்து நாட்களுக்கு முன்பு உத்திரப்பிரதேசத்தின் சப்பர் பிராந்தியத்தில் உள்ள ரெட்டா நாக்லா கிராமத்தில் நடந்தது. ஆனால் இந்த சம்பவத்தின் வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலான பிறகுதான் காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

செய்திகளின்படி, பட்டியலினத் தொழிலாளியான 41 வயதான தினேஷ் குமார், சக்தி மோகன் சிங் என்ற கிராமத் தலைவரைப் பற்றி சில கருத்துக்களைக் கூறியதாகக் கூறப்படுகிறது.

Continues below advertisement

பிரச்சினையை தீர்க்க, பக்கத்து கிராமத்தின் முன்னாள் தலைவர் கஜே சிங், ரெட்டா நாக்லாவில் உள்ள இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்தார்.

இந்த சந்திப்பின் போது பொறுமை இழந்த சக்தி மோகன், தினேஷை காலணியால் தாக்கியதாக கூறப்படுகிறது. கஜே விரைவில் அவனுடன் சேர்ந்து அந்த மனிதரை அடித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் வீடியோ, மொபைல் போனில் படமாக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதை அடுத்து, முசாபர்நகர் போலீசார், தானாக முன்வந்து, சாப்பர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.

மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) வினீத் ஜெய்ஸ்வால் ஞாயிற்றுக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர்களை நாங்கள் காவலில் எடுத்துள்ளோம். அவர்கள் மீது ஐபிசி மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.