Watch Video: ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளம்.. நடுவில் சிக்கிய பேருந்து.... 36 பயணிகளின் கதி என்ன?

உத்தரப்பிரதேசம் நஜிபாபாத்தில் இருந்து ஹரித்வாருக்கு 36-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த பேருந்து வெள்ளத்தில் சிக்கி கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.

Continues below advertisement

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. உத்தரப்பிரதேசம் நஜிபாபாத்தில் இருந்து ஹரித்வாருக்கு 36-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது பிஜ்னூர் கோட்வாலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த பேருந்து சிக்கிக்கொண்டது.

Continues below advertisement

வெள்ளத்தில் சிக்கிய பேருந்து:

அப்போது உதவி கேட்டு பயணிகள் அலறி உள்ளனர். சிலர் ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்றனர்.அப்போது ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன்  பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லாமல் தடுத்த நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு, பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.

இது குறித்த வீடியோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. அந்த பேருந்தில் பயணித்த யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க, 

கொடூரம் பற்றி ஒரு மாதத்திற்கு முன்பே தெரிந்த பிறகும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? தூங்கி கொண்டிருந்தது தேசிய மகளிர் ஆணையமா? அரசா?

TN Headlines: தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. முதியோர் உதவித் தொகை உயர்வு.. தமிழ்நாட்டின் முக்கிய செய்திகள்..!

 

Continues below advertisement
Sponsored Links by Taboola