Breaking LIVE : `கோவை கார் வெடித்த வழக்கு : 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 28 Oct 2022 05:10 PM
`கோவை கார் வெடித்த வழக்கு : 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

கோவையில் கார் வெடித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தது

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.82.48 ஆக வர்த்தகம் 

மழையால் கைவிடப்பட்ட இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணியின் போட்டி

டி-20 உலகக் கோப்பை : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி டாஸ் கூட போடாமல் மழையால் கைவிடப்பட்டது

மழையால் கைவிடப்பட்ட இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணியின் போட்டி

டி-20 உலகக் கோப்பை : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி டாஸ் கூட போடாமல் மழையால் கைவிடப்பட்டது

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா போட்டி மழையால் ரத்து

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் பந்த் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை - நீதிபதிகள் எச்சரிக்கை

கோவையில் பந்த் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

கோவை கார் வெடிப்பு : 109 பொருட்கள் பறிமுதல் 

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என் ஐ ஏ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளசரின், சிவப்பு பாஸ்பரஸ் உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் 

இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு 

குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை  ஏற்கமுடியாது

குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோக்கள், ரிக்‌ஷாக்களில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது : உயர்நீதிமன்ற மதுரை கிளை

Breaking LIVE : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்- ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து போட்டி மழையினால் கைவிடப்பட்டது!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற இருந்த ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி மழையினால் கைவிடப்பட்டது. இந்தப் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது.

சவரனுக்கு ரூ.80 குறைவு..இன்றைய தங்க விலை நிலவரம்!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80  குறைந்து ரூ.37,880 ஆக விற்பனையாகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,735 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 41, 176 ரூபாயாகவும், ஒரு கிராம் 5, 147 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Breaking LIVE : ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை!

Stock Market Update: இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகளானது ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.







இன்று காலை தொடங்கிய மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 261.95 புள்ளிகள் அதிகரித்து 60,018.79 ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 68.85  புள்ளிகள் அதிகரித்து 17,805.80 புள்ளிகளாக உள்ளது.





Breaking LIVE : தங்கம் விலை சரிவு! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80  குறைந்து ரூ.37,880 ஆக விற்பனையாகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,735 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 41, 176 ரூபாயாகவும், ஒரு கிராம் 5, 147 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Breaking LIVE : தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி!

வருகிற நவம்பர் 11ம் தேதி தென்னிந்தியா வரும் பிரதமர் மோடி, சென்னை- மைசூர் இடையிலான வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். 

இத்தாலியில் கால்பந்து வீரருக்கு கத்திக்குத்து..!

இத்தாலி மிலன் நகரில் உள்ள ஷாப்பிங் மாலில் அர்செனல் அணி வீரர் பாப்லோ மாரியை மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்தினார். 5 பேரை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தநிலையில் பாப்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


 

கேரளாவில் மீண்டும் பறவைக்காய்ச்சல்..!

கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவுவதன் காரணமாக வாத்து, கோழிகளை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Background

Petrol, Diesel Price :  தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 160வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 







சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 150 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.






கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.









இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..? 


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025 ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.