Breaking LIVE: ஈரோடு மாவட்டம் பவானி தாலுக்காவில், 15 வயது சிறுமியைக் கடத்திய 17 வயது மாணவன் போக்சோவில் கைது

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

மணிகண்டன் Last Updated: 09 Nov 2022 05:52 PM
ஈரோடு மாவட்டம் பவானி தாலுக்காவில், 15 வயது சிறுமியைக் கடத்திய 17 வயது மாணவன் போக்சோவில் கைது

ஈரோடு மாவட்டம் பவானி தாலுக்காவில், 15 வயது சிறுமியைக் கடத்திய 17 வயது மாணவன் போக்சோவில் கைது

கர்நாடகாவில் திருடப்பட்ட பாலாஜி சுவாமி சிலை, கோபிச்செட்டிப்பாளையத்தில் பறிமுதல்

கர்நாடகாவில் திருடப்பட்ட பாலாஜி சுவாமி சிலை, கோபிச்செட்டிப்பாளையத்தில் பறிமுதல்

Breaking Live: பாகிஸ்தானில் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப்புக்குள் ஊடுருவிய டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எப் வீரர்கள் டிரோனை சுட்டு வீழ்த்தினர்.

"வாக்காளர் பட்டியலில் 17.69 லட்சம் பேர் நீக்கம்"

வாக்காளர் பட்டியலில் 17.69 லட்சம் பேர் நீக்கப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு  தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.

தமிழக ஆளுநரை திரும்பப் பெற கோரி குடியரசுத் தலைவரிடம் மனு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக திமுக, அதன் கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நீண்ட காலமாக நிலுவையில் வைத்துள்ளதாகவும், எனவே ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை டி20-இன்று முதல் அரையிறுதி

டி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதவுள்ளன. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து மற்றும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் இடையே இந்தப் போட்டி நடைபெறுகிறது. பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளம், டோட்டி மாவட்டத்தில் வீடு இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் நள்ளிரவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Background

Petrol, Diesel Price :  தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 172வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 







சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 150 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.






கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.









இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..? 


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025 ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.