Breaking LIVE: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு : இறுதி அறிக்கை தாக்கல்

Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை அடுத்தடுத்து ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 20 Aug 2022 07:00 PM
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு : இறுதி அறிக்கை தாக்கல்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

கச்சத்தீவை மீட்க சட்ட நடவடிக்கை : மத்திய இணை அமைச்சர்

கச்சத்தீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சியில் மத்திய இணை அமைச்சர் முரளிதரன் பேட்டியளித்தார். 

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் : தலைமை செயலாளர் உத்தரவு

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ராமஜெயம் கொலை  -  மாருதிசுசுகி  வெர்ஷா கார் முக்கியதடயம்

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக மாருதி சுசுகி  வெர்ஷா உரிமையாளர்களிடம் சிபிசிஐடி விசாரணை 

ஒண்டிவீரன் அஞ்சல் தலையை வெளியிட்டார் ஆளுநர் ரவி 

பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் அஞ்சல் தலையை ஆளுநர் வெளியிட தமிழிசை பெற்றுக்கொண்டார்

போக்குவரத்து காவல் கூடுதல்  ஆணையர் கபில்குமார் செய்தியாளர் சந்திப்பு

போக்குவரத்து விதிகளின்படி நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்த வேண்டும். விதிகளை மீறி வாகனப்பதிவு எண் பிளேட்டுகள் வைத்திருந்த 800 பேர் மீது வழக்கு. 

+2 துணைத்தேர்வு மதிப்பெண்பட்டியல் ஆக.22ல் வெளியீடு

+2 துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியலை ஆக.22 மதியம் 2 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

ஸ்மார்ட் சிட்டி ஊழல் -முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

விசாரணை முடிந்ததை தொடர்ந்து முதல்வர்  மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல். ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார் ஒரு நபர் ஆணைய தலைவர் டேவிதார்

Breaking LIVE: பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடக்கம்

பொறியியல் படிப்பிற்கான சிறப்பு பிரிவினர் கலந்தாய்வு தற்போது தொடங்கியுள்ளது.

துணைவேந்தர்களை நியமிக்கும் மசோதா - தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் கடிதம்

துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிப்பது சட்டத்திற்கு விரோதமானது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

Breaking LIVE: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள்... ராகுல் காந்தி மரியாதை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவருடைய மகனும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

Breaking LIVE: தென் அமெரிக்க நாடுகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்..

தென் அமெரிக்கா நாடுகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம்.

Breaking LIVE: உக்ரைன் நாட்டிற்கு மீண்டும் நிதியுதவி வழங்கிய அமெரிக்கா

உக்ரைனுக்கு மேலும் 775 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அமெரிக்கா வழங்குகிறது. 

Breaking LIVE: இந்தியா-ஜிம்பாவே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் இன்று

இந்தியா-ஜிம்பாவே அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. 

Breaking LIVE: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மும்பையில் உறியடித் திருவிழா

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மும்பையில் நேற்று களைகட்டிய உறியடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 

Breaking LIVE: டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிஷோடியா வீட்டில் 13 மணி நேர சோதனை

டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிஷோடியாவின் வீட்டில் 13 மணி நேர சோதனை நிறைவு பெற்றது. 

Breaking LIVE: கொங்கு மாவட்டங்களுக்கு 3 நாள் பயணமாக செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்

கோவை,ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களுக்கு 3 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 23ஆம் தேதி செல்ல உள்ளார். 

Breaking LIVE: அரசு பள்ளிகள் அருகே உள்ள மதுக்கடைகள் மூடப்படும்-அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசு பள்ளிகள் அருகே உள்ள மதுக்கடைகள் அகற்றம் செய்யப்பட உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.

Background

சென்னையில் 91வது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. 


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு  நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.  இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 89ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று ( ஆகஸ்ட்.18) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.





தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 










கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.


 







- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.