Breaking News LIVE: ஒற்றைத் தலைமைக்கு மாறுவது தொண்டர்கள் விருப்பம் - எடப்பாடி பழனிசாமி மனுவில் தகவல்

Breaking News: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே உடனுக்குடன் காணலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 16 Mar 2023 03:44 PM
செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி..!

செய்தியாளர் சந்திப்பில் பேசி வருகிறார் ராகுல் காந்தி.

Breaking News LIVE: ஒற்றைத் தலைமைக்கு மாறுவது தொண்டர்கள் விருப்பம் - எடப்பாடி பழனிசாமி மனுவில் தகவல்

உள்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுமாறு மனுதாரர் கோர முடியாது  - ஒற்றைத் தலைமை மற்றும் பொதுச் செயலாளர் பதவி என்பது தொண்டர்களின் விருப்பம் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தகவல்  

Breaking News LIVE: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாத கவிதா

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தெலங்கானா முதல்வரின் மகள்  கவிதா ஆஜராகவில்லை - மார்ச் 11 ஆம் தேதி ஏற்கனவே ஆஜரான நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அமலியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு- தமிழ்நாடு அரசு அரசாணை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 15, 000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 


இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 12, 000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: ஈவிகேஸ் இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம் - சாதாரண வார்டுக்கு மாற்றம்

உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ஈரோடு கிழக்கு  தொகுதி எம்.எல்.ஏ.,  ஈவிகேஸ் இளங்கோவன் உடல் நிலை சீராக உள்ளது - அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றம் 

Breaking News LIVE: பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் பேர் மொழித்தாள் தேர்வை எழுத வராத விவகாரம் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் 

Breaking News LIVE: மேற்குத்தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ 

தேனி பெரியகுளம் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 3வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ - கும்பக்கரை, செழும்பு, ஈச்சமலை வனப்பகுதிகளில் பரவிய தீயை 70க்கும் மேற்பட்டவர்கள் 5 குழுக்களாக பிரிந்து அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


 

Breaking News LIVE: தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி தலைவர் இரவில் நீக்கம்.. காலையில் கட்சியில் சேர்ப்பு..

கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த புகாரில்  தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடியை நீக்கி மாவட்ட தலைவர் நேற்று இரவு உத்தரவு - இன்று காலை தினேஷை மீண்டும் பாஜகவில் சேர்த்து மாநில பொதுச்செயலாளர் பாலகணபதி சேர்த்ததால் பரபரப்பு 

Breaking News LIVE: நியூசிலாந்து, கெர்மாடெக் தீவு அருகே பயங்கர நிலநடுக்கம் 

நியூசிலாந்து, கெர்மாடெக் தீவு அருகே  பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.1 என பதிவான நிலையில் சுனாமி எச்சரிக்கை இதுவரை விடுக்கப்படவில்லை 

Background

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வருகிறது. ஆனாலும் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ளவில்லை. இந்தியாவும் அதற்கான முயற்சியில் முழு மூச்சாக களமிறங்கியுள்ளது. அதேசமயம் பெட்ரோல் டீசல் சம்பந்தமான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதனால் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி வெகு விரைவில் தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம். 


இந்தியாவில் 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருவதால்  பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. ஆக, எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் விலை நிலவரத்தை மக்கள் கண்காணித்து வருகிறார்கள்.


299வது நாள்:


சென்னையில் இன்று (மார்ச்.16) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து விலை மாற்றமின்றி 299வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். 


இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. அதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.  


இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.