Breaking News LIVE: மார்ச் 14 முதல் தமிழ்நாட்டில் மழை

Breaking News: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே உடனுக்குடன் காணலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 12 Mar 2023 12:43 PM
Breaking News LIVE: மார்ச் 14 முதல் தமிழ்நாட்டில் மழை

தமிழ்நாடு,புதுச்சேரியில் மார்ச் 14, 15, 16 ஆகிய நாள்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வரும் 14,15 ஆகிய தேதிகளில் தென் தமிழ்நாடு, டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..

பிரதமர் மோடி 2 மாதங்களில் 6வது முறையாக கர்நாடகாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ரூ 8.480 கோடி மதிப்பில் பெங்களூரு - மைசூரு அதிவிரைவுச் சாலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார், இதற்காக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Breaking News LIVE : வதந்தி வீடியோ - ஜார்க்கண்ட் நபர் கைது

வடமாநில தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ பரப்பிய ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த பிரசாந்த் குமார் என்பது கைது செய்யப்பட்டுள்ளார்.

Breaking News LIVE: சீமான் மீது வழக்குப்பதிவு

புலம்பெயர் தொழிலாளர்கள் போலி வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்படுவதாக ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது சீமான் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Breaking News LIVE: அமமுக பிரமுகர் தாக்கப்பட்ட விவகாரம் - எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு

மதுரை விமான நிலையத்தில் அமமுக பிரமுகர் தாக்கப்பட்ட விவகாரம் - புகாரின் அடிப்படையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு 

Breaking News LIVE : ஸ்ரீரங்கத்தில் கார் ஏறியதில் 3 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நடைபாதையில் கார் ஏறியதில் அங்கு தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

டென்ஷன் இல்லாமல் தேர்வு எழுதுங்கள் : முதல்வர் ஸ்டாலின்

10 மற்றும் 12ஆம்  வகுப்பு மாணவர்கள் டென்ஷன், பயம் இல்லாமல் பொதுத்தேர்வை எழுத வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இது ஜஸ்ட் ஒரு தேர்வுதான் என்ற முறையில் மாணவர்கள் தேர்வை அணுக வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இலங்கை கடற்படை அட்டூழியம் - தமிழக மீனவர்கள் 16 பேர் கைது..

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 16 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை. 2 விசைப்படகுகளில் சென்ற 16 பேர் கைது செய்யப்பட்டனர். 

Breaking News LIVE: ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான  ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் - ஹால் டிக்கெட் வெளியிடுவது குறித்த அறிவிப்பு விரைவில்  வெளியாகும் என தகவல் 

Breaking News LIVE: சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி - டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி மார்ச் 22 ஆம் தேதி நடக்கிறது - டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம் 

Background

சென்னையில் தொடர்ந்து 295வது நாள்களாக மாற்றமில்லாமல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வருகிறது. ஆனாலும் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ளவில்லை. இந்தியாவும் அதற்கான முயற்சியில் முழு மூச்சாக களமிறங்கியுள்ளது. அதேசமயம் பெட்ரோல் டீசல் சம்பந்தமான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதனால் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி வெகு விரைவில் தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம். 


இந்தியாவில் 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருவதால்  பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. ஆக, எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் விலை நிலவரத்தை மக்கள் கண்காணித்து வருகிறார்கள்.


தொடர்ந்து மாறாத எரிபொருள் விலை 


சென்னையில் இன்று (மார்ச்.12) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து விலை மாற்றமின்றி 295வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். 


இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. அதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.  


இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.