Breaking News LIVE: மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு ஏற்பு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

ஆர்த்தி Last Updated: 26 Jul 2023 08:40 PM
பிரபல படத்தொகுப்பாளர் காலமானார்! அடேங்கப்பா! அதிகம் ரஜினி, கமல் படங்கள்தான்..! 

ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபல நடிகர்களின் திரைப்படங்களை தொகுத்த வீடியோ எடிட்டர் விட்டல் காலமானார். 


பிரபல படத்தொகுப்பாளர் விட்டல். இவருக்கு வயது 90. இவர் ஆடுபுலி ஆட்டம், படிக்காதவன், ஜப்பானில் கல்யாண ராமன், முரட்டுக்காளை, நல்லவனுக்கு நல்லவன், நான் மகான் அல்ல, பாயும் புலி, சர்வர் சுந்தரம், விக்ரம், ராஜா, சின்ன ரோஜா ஆகிய திரப்படங்களை இவர்தான் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது. 

எந்தக் கொம்பனும் குறை சொல்லமுடியாத அளவிற்கு ஆட்சி நடத்தி வருகிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

திருச்சியில் திமுக வாக்குச் சாவடி முகவர்கள் பாசறை பயிற்சி பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாதபடி ஆட்சி நடத்தி வருகிறோம் என பேசினார். மேலும் அவர் பேசுகையில், திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கொண்டுவரும் தகுதியான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும் என்றார். 

சட்டப்பேரவை நிகழ்வை நேரலை செய்ய இயலாது - தூர்தர்ஷன்

சட்டப் பேரவை நிக்ழ்வை நேரலை செய்ய முடியாது என தூர்தர்ஷன் உயர் நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு - உச்ச நீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை இன்று காரசாரமாக நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம் . 

Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே நீட்டிக்கப்பட்டிருந்த நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விவாதிக்க எவ்வளவு நேரம் தேவை என்ற நீதிபதிகளின் கேள்விக்கு, ஒருநாள் முழுவதும் தேவை என  செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான கபில் சிபில் தெரிவித்துள்ளார். 

மக்களவை 2 மணிவரை ஒத்திவைப்பு

பிற அலுவல்களை ஒத்திவைத்து உடனடியாக மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தல்.. மக்களவை 2 மணிவரை ஒத்திவைப்பு

பிற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு உடனடியாக மணிப்பூர் பற்றி விவாதம் நடத்த எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

பிற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு உடனடியாக மணிப்பூர் பற்றி விவாதம் நடத்த எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

ஆளுங்கட்சி எதிர்கட்சி எம்பிக்களுக்கு இடையே அமளி.. பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது மக்களவை

ஆளுங்கட்சி எதிர்கட்சி எம்பிக்களுக்கு இடையே அமளி.. பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது மக்களவை

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு ஏற்பு

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு ஏற்பு

Breaking News LIVE: அவையில் பேசியபோது தனது மைக் அணைக்கப்பட்டது தனக்கு நேர்ந்த அவமானம் - கார்கே

அவையில் பேசியபோது தனது மைக் அணைக்கப்பட்டது தனக்கு நேர்ந்த அவமானம் என எதிர்க்கட்சி தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE: மாநிலங்களவையில் அமளிக்கிடையே கேள்வி நேரம்..!

மாநிலங்களவையில் அமளிக்கிடையே கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. 

மோசடி பேர்வழிகள் என விமர்சித்ததற்கு எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக எம்.பிக்கள் வலியுறுத்தல்

மோசடி பேர்வழிகள் என விமர்சித்ததற்கு எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக எம்.பிக்கள் வலியுறுத்தல்

மோசடி பேர்வழிகள், பாஜக எம்.பிக்கள் என எதிர்க்கட்சிகள் அவதூறு செய்ததாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

மோசடி பேர்வழிகள், பாஜக எம்.பிக்கள் என எதிர்க்கட்சிகள் அவதூறு செய்ததாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

மைக் அணைப்பது போன்ற நடவடிக்கைகள் முன்பு எப்போதும் நடந்ததில்லையே.. திருச்சி சிவா, எம்.பி ஆவேசம்

கார்கே பேசும்போது மைக்கை அணைக்க உத்தரவிட்டது யார்? மைக் அணைப்பது போன்ற நடவடிக்கைகள் முன்பு எப்போதும் நடந்ததில்லையே.. திருச்சி சிவா, எம்.பி ஆவேசம்

கார்கே பேசும்போது மைக் ஏன் அணைக்கப்பட்டது? திருச்சி சிவா எம்.பி., ஆவேசம்..

கார்கே பேசும்போது மைக் ஏன் அணைக்கப்பட்டது? யாருடைய உத்தரவின் பேரில் மைக்கை அணைத்தீர்கள்? திருச்சி சிவா எம்.பி., ஆவேசம்..

Parliament Monsoon Session : மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் : காங்கிரஸின் நோட்டீஸுக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் ஆதரவு

Parliament Monsoon Session : மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் : காங்கிரஸின் நோட்டீஸுக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் ஆதரவு

Parliament Monsoon Session : எதிர்கட்சிகளின் முழக்கங்களுக்கு இடையில், அவை நடவடிக்கைகள் தொடர்கின்றன

Parliament Monsoon Session :  ம்ணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமரை பேச வலியுறுத்தும் எதிர்கட்சிகளின் முழக்கங்களுக்கு இடையில், அவை நடவடிக்கைகள் தொடர்கின்றன

கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்காக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று 2 நிமிடம் மெளன அஞ்சலி

கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்காக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று  2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்

நாடாளுமன்றத்தில் 5-வது நாளாக எதிர்கட்சிகள் முழக்கம்

நாடாளுமன்றத்தில் 5-வது நாளாக எதிர்கட்சிகள் முழக்கம் : மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸை வழங்கியது காங்கிரஸ்

மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸை வழங்கியது காங்கிரஸ் கட்சி

மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸை வழங்கியது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கொடுத்த நோட்டீஸுக்கு திமுக ஆதரவு என எம்.பி டி.ஆர் பாலு தகவல்.

ஒகேனக்கல் நீர்வரத்து 7000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் நீர்வரத்து 7000 கன அடியாக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிபேட், திருப்பத்தூர், திண்டுக்கல், நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

Background

Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம்.


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூலை 26) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 431வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.