Breaking News LIVE: ராமநாதபுரம் அருகே அரசு விரைவு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழப்பு..!

Breaking News LIVE:நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 14 Aug 2023 04:56 PM
Breaking News LIVE: ராமநாதபுரம் அருகே அரசு விரைவு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழப்பு..!

ராமநாதபுரம்: கீழக்கரை பேருந்து நிலையம் அருகே அமர்ந்திருந்தவர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 3 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தநிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை கேட்டு செந்தில் பாலாஜி மனு

அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியிடம் முறையிடப்பட்டுள்ளது. மனு தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பிற்கு தகவலை தெரிவிக்க அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி மனு

அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Breaking News LIVE: பிரிவினை நினைவு நாள் - பிரதமர் மோடி ட்வீட்


நாட்டின் பிரிவினையின்போது உயிர் தியாகம் செய்த இந்தியர்களை பயபக்தியுடன் நினைவு கூர்வோம் - இடப்பெயர்வின் சுமைகளை சுமக்க தள்ளப்பட்டவர்களின் துன்பங்களை இந்த நாள் நமக்கு நினைவூட்டுவதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். 

காவிரி நீர் - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு

காவிரியில் விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி நிர் திறக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. வழக்கு தொடர்வது குறித்து மூத்த வழக்கறிஞர் முகுல் ரோக்தியுடன் தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் தேவை என்பதால் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Breaking News LIVE: நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை - முதலமைச்சர் வேதனை

நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெகதீஸ்வரன் போன்ற எத்தனை உயிர்கள் பலியானாலும் நீட் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி போன்றோரின் இதயம் கரையப்போவதில்லை. இப்படிப்பட்ட கல்நெஞ்சுக்காரர்களின் காலத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE: நாங்குநேரி சம்பவம் - திருமாவளவன் போராட்டம் அறிவிப்பு

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் மாணவன் தாக்கப்பட்டதை கண்டித்து ஆகஸ்ட் 20 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு 

Breaking News LIVE: திருப்பதியில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது

 


திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் 6 வயது சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது  - சிறுமி தாக்கப்பட்ட நரசிம்மசுவாமி கோயில் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. 

Breaking News LIVE: சென்னையில் கனமழை - விமான சேவை பாதிப்பு 

சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது - துபாய், சார்ஜாவில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. 

Breaking News LIVE: சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் - திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

Breaking News LIVE: அனைத்து பள்ளிகளிலும் இன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுகிறது..!

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி அனைத்து பள்ளிகளிலும் இன்று மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படுகிறது. கோடை விடுமுறை காரணமாக ஜூன் 3 ஆம் தேதி வழங்க முடியாத நிலையில், இன்று வழங்கப்படுகிறது 

Background

Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 14) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 450வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.