Breaking News LIVE: பாஜகவை வலுப்படுத்த தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் அமித் ஷா: பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
அமித்ஷாவின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ”அமித் ஷாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள். அவர் ஒரு கடின உழைப்பாளி. பாஜகவை வலுப்படுத்த தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். அவர் ஒரு விதிவிலக்கான நிர்வாகியாக முத்திரை பதித்துள்ளார். விக்சித் பாரதத்தின் பார்வையை நனவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்”
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி சரவணன் திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்புக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை நவம்பர் 22ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு, ஹைதராபாத் நகர சிவில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பவன் கல்யாண் கருத்து இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4 நாட்கள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் 26 பேர் இன்று அறிவுரை கழகத்தில் ஆஜர் ஆகின்றனர். ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உட்பட 26 பேர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் ஆஜராகின்றனர். 26 பேரும் ஆஜராகவுள்ளதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஒசூர் விமான நிலைய பணியை விரிவுபடுத்த வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஓசூர் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த தி.மு.க. அரசை வலியுறுத்தல்! pic.twitter.com/rXZJw42qtt
— O Panneerselvam (@OfficeOfOPS) October 22, 2024
Background
- சென்னை அண்ணா அற்வாலயத்தில் முரசொலி செல்வத்தின் உருவப்படம் திறப்பு - முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
- தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
- தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல 14,086 சிறப்பு பேருந்துகள் - தமிழக அரசு அறிவிப்பு
- அகரம் முத்தாலம்மன் கோயிலில் கண் திறப்பு வைபவம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
- சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீசாரிடம் போதையில் தகராறு செய்த கணவன் - மனைவி, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
- நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை
- மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் வெற்றி கண்ட தென்மாநிலங்களை தண்டிப்பதா என காங்கிரஸ் கேள்வி - நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தை குறைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தல்
- கொல்கத்தாவில் 16 நாட்களாக நடைபெற்ற மருத்துவர்களின் உண்ணாவிரதம் வாபஸ் - முதலமைச்சர் மம்தா பானர்ஜி உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அறிவிப்பு
- பிரியங்கா காந்தி வயநாடு இடைத்தேர்தலில் போட்டி - இன்று கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
- உத்தரபிரதேச மாநிலத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 5 பேர் உயிரிழப்பு
- வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த ஆவணம் இல்லை: அதிபர் அறிவிப்பால் பரபரப்பு
- ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல் - வெளியான ரகசிய ஆவணங்கள்
- அமெரிக்காவில் வானொலி கோபுரத்தில் மோதி வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர் - பயணித்த குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு
- - - - - - - - - Advertisement - - - - - - - - -