Watch video : கிரிக்கெட் விளையாடி சர்ச்சையில் சிக்கும் பிரக்யா சிங்...மீண்டும் மீண்டுமா..?

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி உடல்நலத்தை காரணம் காட்டி ஜாமினில் வெளியேவந்த பா.ஜ., எம்.பி., பிரக்யா சிங் தாக்குர் கிரிக்கெட் விளையாடிய காட்சி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

மஹாராஷ்டிராவின் இடத்தில் 2008ம் மாலேகான் என்ற ஆண்டு நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர்; ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ஜ.கவைச் சேர்ந்த பிரக்யா தாக்குர் 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அதன் பிறகு உடல் நலக்குறைவை காரணம் காட்டி பிரக்யா தாக்குர் கடந்த 2017 ம் ஆண்டு ஜாமினில் வெளியே வந்தார்.

Continues below advertisement

தொடர்ந்து, பிரக்யா தாக்குர்  2019 ம் ஆண்டு நடந்த லோக் பிரக்யா சபா தேர்தலில், மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு எம்.பி.,யாக பிரக்யா தேர்வானார். பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக பிரக்யா சிங் தாக்குர் சக்கர நாற்காலியில் வலம் வந்தார். இதை காரணம் காட்டி பிரக்யா நீதிமன்றத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு பெற்றார்.

 

இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் பிரக்யா சிங் தாக்குர் 'பேட்'டை பிடித்து  கிரிக்கெட் விளையாடி உள்ளார். தற்போது அதன் 'வீடியோ' வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் பிரக்யா கடந்த அக்டோபர் 13 ம் தேதி போபாலில் உள்ள காளி கோவிலுக்கு சென்ற அவர், பெண்களுடன் அங்குள்ள மைதானத்தில் உற்சாகமாக கபடி விளையாடியுள்ளார். தொடர்ந்து, போபால் மைதானத்தில் பிரக்யா சிங் கூடைப்பந்து விளையாடும் வீடியோவும்,திருமண விழா ஒன்றில் நடனமாடும் வீடியோவும் வெளியாகி மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

மேலும் படிக்க : ‛ஹோண்டா கார் எண்ட்ரி... வழிநெடுக நன்றி... ஒரே நாளில் ஆல் பேமஸ் கண்ட்ரி’ ஆவடி அன்னபூரணி... அம்மா ஆன கதை!

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement