Bipin Rawat Demise: ‛அடுத்த முப்படை தளபதி... தகுதியுள்ளவராக இருக்க வேண்டும்...’ -முன்னாள் தளபதி ஷங்கர் ராய்சவுத்ரி!

Bipin Rawat Demise: ‛அடுத்த முப்படைகளின் தளபதி, முப்படைகளின் தலைவர்களில் இருந்து சீனியாரிட்டியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’ --முன்னாள் தளபதி ஷங்கர் ராய்சவுத்ரி

Continues below advertisement
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில், அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது. யுள்ளது. ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்த நிலையில், காட்டேரி என்ற இடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த நிலையில் பல்வேறு நபர்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி, 13 பேர் உயிரிழந்தனர். 
ஒரு ஆண் மட்டும் சிகிச்சையில் உள்ளார். 

Continues below advertisement

துரதிர்ஷ்டவசமான இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங், படுகாயங்களுடன் வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
 
இன்று டில்லியில் அவர்களின் இறுதிச்சடங்கு நடைபெறவிருக்கும் நிலையில், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் இறப்பு குறித்து ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத் தளபதி  ஷங்கர் ராய்சவுத்ரி பேட்டி அளித்துள்ளார். 

‛‛ தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் சிறந்த ராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 
அவர் ஒரு சிறந்த அதிகாரி. முப்படைகளுக்கு இடையே தேவையான மாற்றங்களை அவர் செய்து வந்தார். ராவத் இந்திய ராணுவ அகாடமியில் பட்டாலியன் கமாண்டராக இருந்தபோது அவரது கேடட்களில் நானும் ஒருவராக இருந்தேன். அவரது மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. 

ஜெனரல் ராவத்தின் தந்தை லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) எல்.எஸ். ராவத்தின் பணியில் சிறந்தவர். அவர் ஒரு பிரகாசமான கேடட்;  அவரது பாடத்திட்டத்தில் மரியாதைக்குரிய வாளைப் பெறுவதன் மூலம் எங்கள் எதிர்பார்ப்புகளை அவர் நியாயப்படுத்தினார். அவர்கள் ஒரு சிறந்த இராணுவ குடும்பம். அவர்களுடனான எனது தொடர்பு நெருக்கமானது.

முதல், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் தலைமை தளபதியாக தேவையான மாற்றங்களை கொண்டு வருவதில் ராவத் சிறப்பாக பணியாற்றினார். அடுத்த முப்படைகளின் தளபதி, முப்படைகளின் தலைவர்களில் இருந்து சீனியாரிட்டியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், மேலும் அவர் பணிக்கு தகுதியானவராக இருக்க வேண்டும். என்றும், கூறினார்.

 
Continues below advertisement