Just In





பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பூசாரியாக இருந்த ராமர் கோயில் அர்ச்சகருக்கு வந்த நோய்: மருத்துவமனையில் அனுமதி!
அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்தார்.

ராமர் கோயில் தலைமை அர்ச்சகருக்கு மூளை பக்கவாதம் ஏற்பட்டதால் அவர் கவலைக்கிடமாக உள்ளார்.
அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்தார். இதையடுத்து 85 வயதான மஹந்த் சத்யேந்திர தாஸ், சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (SGPGI) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்ரீ சத்யேந்திர தாஸ் அவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை SGPGI மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது நரம்பியல் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “அவரது உடல்நிலை மோசமாக இருக்கிறது. ஆனாலும், அவர் மருத்துவர்களின் கட்டளைகளைப் பின்பற்றுகிறார். தற்போது அவரது முக்கிய செயல்பாடுகள் சீராக உள்ளன. அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, தாஸ் தற்காலிக ராமர் கோயிலின் பூசாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.