அசாமில் ஜீன்ஸ், லெக்கின்ஸ் ஆகிய உடைகளை அணிய ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.


ஜீன்ஸ், லெக்கின்சுக்கு தடை:


அசாமில் பள்ளிக்கு வரும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கான புதிய ஆடை கட்டுப்பாடுகளை பள்ளி கல்வித்துறை இன்று அறிவித்து உள்ளது. இதன்படி ஆசிரியர், ஆசிரியைகள் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் லெக்கின்ஸ் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.


இதனை பொதுமக்கள் அதிகளவில் ஏற்று கொள்ளவில்லை என விளக்கமும் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில், கல்வி நிலையங்களில் பணிபுரியும் சில ஆசிரியர், ஆசிரியைகள் விருப்பத்திற்கேற்ப ஆடைகளை அணிவதா? எங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 


ஆனால் இது போன்று ஆசிரியர்கள் விரும்பிய ஆடைகளை எல்லாம் அணிவது,பெருமளவிலான மக்கள் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை என்றும், ஆசிரியர்கள் பணியின்போது, அனைத்து வகையிலும் ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேணடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


ஆடைக்கட்டுப்பாடு:


ஆசிரியர்களின் ஆடை கட்டுப்பாடானது, நல்லொழுக்கம், நாகரீகம், தொழில் சார்ந்த விதம் மற்றும் பணியிடத்திற்கு ஏற்ற நாகரீகம் ஆகியவற்றை பிரதிபலிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் தாங்கள் மேற்கூறிய விஷயங்களை கவனத்தில் கொண்டு, அனைத்து கல்வி நிலையங்களை சார்ந்த ஆசிரியர், ஆசிரியைகளும் பின்வரும் ஆடை கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என பள்ளி கல்வி துறை கேட்டு கொண்டு உள்ளது. அதாவது, ஆசிரியர், ஆசிரியைகள் என்ன வகையான ஆடைகளை அணியலாம்,  எந்த மாதிரியான ஆடைகளை அணிய கூடாது என அறிவித்து உள்ளது.


என்னென்ன ஆடைக்கு அனுமதி?


ஆசிரியர்கள் பேண்ட், சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். டி-சர்ட், ஜீன்ஸ் உள்ளிட்ட ஆடைகளை அணிய கூடாது. ஆசிரியைகள் சல்வார், சேலை ஆகிய ஆடைகளை அணிந்து பணிக்கு வரவேண்டும். மாறாக, டி-சர்ட், ஜீன்ஸ் மற்றும் லெகிங்ஸ் உள்ளிட்ட உடைகளை அணிந்து வர கூடாது. ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் என இருவரும் உடலை அதிகம் மறைக்கும் படியான மற்றும் கண்ணியமிக்க ஆடைகளை,  அணிந்து வரவேண்டும். (விருந்து) பார்ட்டி போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது அணிய கூடிய ஆடைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும் என கேட்டு கொண்டு உள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் மீறினால் விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது