டெல்லி அருகில் உள்ள குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆஷிஷ் யெச்சூரி தனது 34-வது வயதில் காலமானார். 






இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் ஆஷிஷ் யெச்சூரியின் தந்தையுமான சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் 'எனது மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரியை இன்று காலை கொரோனாவினால் இழந்தேன் என்பதை நான் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதனை நாள் எங்களுக்கு நம்பிக்கை அளித்து எனது மகனுக்கு சிகிச்சை அளித்த அனைவருக்கும் - மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள சுகாதார ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் எங்களுடன் நின்ற எண்ணற்ற மக்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.