பாலிவுட் சூப்பர் ஸ்டார் என அறியப்படும் நடிகர் அக்‌ஷய் குமாரின் தயார் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்தி பட நடிகரும் , தமிழில் எந்திரன்  படத்தில் நடித்தவருமான அக்‌ஷய் குமாரின் தாய் சமீப காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அக்‌ஷய் குமார், அவர் நலம் பெற பிராத்தித்த ரசிகர்களுக்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார். மேலும் எனக்கும் என் குடும்பத்திற்கும் உங்கள் ஒவ்வொருவரின்  வேண்டுதலும் உதவியாக இருக்கும் என உணர்வு பூர்வமாக ஒரு பதிவிட்டுள்ளார்






 


இந்நிலையில்  விரைவில் வெளியாக உள்ள சிண்ட்ரெல்லா என்னும் த்ரில்லர் படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற அவருக்கு அவரது அம்மா அருணா பாட்டியா இறந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால்  அதிர்ச்சியடைந்த அக்‌ஷய் ஷூட்டிங்கை பாதியில் நிறுத்துவிட்டு இந்தியா விரைந்துளார்.வரும் வழியில் அக்‌ஷ்ய் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக ஒரு பதிவிட்டுள்ளார். அதில் “ அவங்கதான் எனக்கு எல்லாவுமா இருந்தாங்க. எனக்கு தீராத வலிய கொடுத்துட்டு ,இன்றைக்கு காலையில அம்மா அப்பாவோட உலகத்துக்கு நிம்மதியா போய் சேர்ந்துட்டாங்க. என்னோட எல்லா நேரத்துலையும் இருந்து அவங்களுக்காக வேண்டிக்கிட்ட எல்லோரையும் நானும் என் குடும்பமும் மதிக்கிறோம். ஓம் ஷாந்தி” என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அக்‌ஷய் குமாருக்கு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுல நண்பர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர்.