ஆந்திராவில் ஆட்டோ மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் இருந்து தும்மலவசையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டுள்ளது. திருமணத்திற்கு சென்று திரும்பி கொண்டிருந்த ஆட்டோ மீது லாரி மோதி விபத்து நடந்துள்ளது.