ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டு திருமண கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.


சர்வதேச அளவில் கவனம் பெரும் அளவில் படு விமர்சையாக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் இந்த விழாவில் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். திரைத்துறை சார்ந்தவர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரபலங்கள் என பல துறைகளை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நேற்று திருமணம் நடந்த நிலையில், இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த நிகழ்வுக்கு பிரதமர் மோடி வருகை புரிந்துள்ளார்.


 






இவரை தவிர, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் உள்ளிட்டவர்களும் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.


பின்னணி பாடகர் ஷங்கர் மகாதேவன், இயக்குநர் அட்லீ மற்றும் அவரின் மனைவி பிரியா, டோலிவுட் நடிகர் வெங்கடேஷ், ஷாருக்கான், சல்மான் கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், கத்ரீனா கைஃப், விக்கி கவுஷல், பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ், அர்ஜுன் கபூர்,   ஜான்வி கபூர், அனன்யா பாண்டே, குஷி கபூர், ஷனயா கபூர், சஞ்சய் தத், ஷாருக்கான் மகள் சுஹானா மற்றும் மகன் ஆர்யன் கான், சாரா  அலி கான் மற்றும் இப்ராஹிம் அலிகான், அனில் கபூர், குஷி கபூர், கரண் ஜோஹர், வருண் தவான், திஷா பதானி, மாதுரி தீட்சித் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.