தமிழ்நாடு:



  • தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 19ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • தெற்கு அந்தமானை ஒட்டி வங்கக்கடலில் உருவான புயல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • 2022ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஆளுநர் ரவி முடித்து வைத்தார்.

  • கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், மாணவி பயன்படுத்திய செல்போனை பெற்றோர் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • சென்னை மியூசிக் அகாடமியின் 96ஆவது ஆண்டு கருத்தரங்கம் மற்றும் இசை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.

  • மார்கழி இசை மன்றங்களில் தமிழ் இசைக்கும், தமிழ் பாடல்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் கோரியுள்ளார்.

  • அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • 4 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இதில் 10 கல்லூரி ஆசிரியர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பணியிட மாறுதலுக்கான ஆணைகளை வழங்கினார்.

  • மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் உமர் என்பவரது வீட்டில் என்ஐஏ அலுவலர்கள் நடத்திய சோதனையில் கத்தி,வாள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  • சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச்சில் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • அரியலூர் விவசாயி மரணம் பற்றிய விசாரணைக் குழுவில் புகாருக்குள்ளான காவல் துறையினர் இடம்பெறக்கூடாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இந்தியா:



  • குருவிக்காரர் சமுதாயத்தை பழங்குடி பிரிவில் சேர்க்க பல்வேறு அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா ஒப்புதலுக்காக, மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

  • 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த கர்நாடக கல்வித்துறை எடுத்துள்ள முடிவால், மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  • எரிபொருள் விலையை உயர்த்தாததால் 3 பெட்ரோலிய நிறுவனங்கள் இழப்பை சந்தித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • மெஹ்ராலி மற்றும் குருகிராம் காடுகளில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகள் ஷ்ரத்தா உடையது என டிஎன்ஏ சோதனையில் தெரிய வந்துள்ளது.


உலகம்:



  • பிரான்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின்படி 36ஆவது ரஃபேல் விமானம் இந்தியா வந்தடைந்தது.

  • நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

  • 2022ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி வரை, உலகம் முழுவதும் 363 செய்தியாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக பத்தியாளர்களை பாதுகாக்கும் கமிட்டி தெரிவித்துள்ளது.

  • உலக சுகாதார அமைப்பு  அதன் தலைமை விஞ்ஞானியாக சௌமியா சுவாமிநாதனுக்கு பதிலாக டாக்டர் ஜெர்மி ஃபாரார் நியமிக்கப்படுவார் என்று அறிவித்துள்ளது. தற்போது வெல்கம் அறக்கட்டளையின் இயக்குநராக இருக்கும் டாக்டர் ஃபரார், 2023ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சுகாதார அமைப்பில் இணைவார்.


விளையாட்டு:



  • வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 404 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

  • அரையிறுதி போட்டிக்குப் பிறகு, பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்வே மொரோக்கோ அணியின் ஹக்கிமியை டேக் செய்து பதிவிட்டுள்ள நெகிழ்ச்சியான ட்வீட் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது.