Just In

தஞ்சையில் காவிரி பாதுகாப்பு மாநில மாநாடு... யார் நடத்த போறாங்க தெரியுங்களா?

கோவையில் கொடூரம்.. வடகிழக்கு மாநில மாணவிகளை குறிவைக்கும் மர்ம நபர்கள்.. நடந்தது என்ன?

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு... கோவளத்தில் புதிய நீர்த்தேக்கம்

ரயில் முன்பதிவுக்கு கெடுபிடி! எமெர்ஜென்சி கோட்டாவுக்கு புது கட்டுப்பாடுகள்! லிஸ்ட் இதோ!

"ஒவ்வொரு இந்தியனின் தாய்க்கும் பெருமை" ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு, மாறி மாறி வெளுத்துக்கொண்ட ஸ்டாலின்-இபிஎஸ் - இப்படியா பண்றது?
9 PM Headlines: ஒரு நிமிடத்தில் ஒருநாள்... இதோ 9 மணி தலைப்பு செய்திகள்!
Headlines 9 PM: இன்று காலை முதல் இரவு 9 மணிவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
Continues below advertisement

இரவு 9 மணி தலைப்புச்செய்திகள்
தமிழ்நாடு:
Continues below advertisement
- அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 2023ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுத் தேதி அட்டவணை போலி என்று சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்து உள்ளது.
- ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளை ஆளுநர் கண்டுகொள்ளாத நிலையில், 12 நாட்களில் 4ஆவது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது என்றும் தடை சட்டத்திற்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
- தமிழ்நாடு முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க. போராட்டம் நடத்த உள்ளது.
- இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக பொறுப்பேற்ற சுக்வீந்தர் சிங் சுகுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- படகு பாதிப்பு கணக்கெடுப்பு 2 நாளில் நிறைவடையும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- கரும்புக்கு ரூ.195 ஊக்கத் தொகையுடன் ரூ.2,950 விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியா:
- இமாச்சல பிரேதேச முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கும், துணை முதலமைச்சராக முகேஷ் அக்னிஹோத்ரியும் இன்று பதவியேற்றனர்.
- சர்வதேச விமான நிலையத்தால் கோவா வளர்ச்சி அடையும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
- குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் நாளை பதவி ஏற்கிறார்.
- உத்தரப்பிரதேச காவல்துறை அதிகாரிகள், இந்து கடவுள்கள், பிரதமர் கதாபாத்திரத்தை தவறாக சித்தரித்ததாக தாண்டவ் வெப்சீரிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
- பான் கார்டை ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
- மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபங்கர் தத்தாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக மத்திய அரசு நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம்:
- சனி கிரகத்தின் பழைய புகைப்படத்தைப் நாசா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
- நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் இன்று பூமிக்கு திரும்புகிறது
- வடக்கு பிரான்சில் ஜெர்சி தீவில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி
- உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.88 கோடியாக உயர்ந்துள்ளது.
விளையாட்டு:
- வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்ததற்கு பிறகு, டெஸ்ட் தொடரை கேஎல் ராகுல் வழிநடத்துவார் என பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.
- முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர், FIFA உலகக் கோப்பை 2022 க்கான தீம் பாடல் பின்னணியில் இசையை பதிவிட்டு, அதில், தான் கால்பந்து விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
- உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரின் காலிறுதிப்போட்டியில் பெற்ற வெற்றியை கொண்டாடும்போது, மொராக்கோ மற்றும் பிரான்ஸ் அணிகளின் ரசிகர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
- சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த நியூசிலாந்தின் மெக்கல்லமின் சாதனையை சமன் செய்துள்ளார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.