தமிழ்நாடு:



  • தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வரும் திங்கள் (டிச.19) மாலை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

  • தமிழ்நாடு அரசு கோரியுள்ள 90 லட்சம் கோமாரி தடுப்பூசியை விரைந்த் வழங்கக்கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்

  • வரும் மக்களைத் தேர்தலில் பா.ஜ.க. - தி.மு.க. கூட்டணி வைக்க உள்ளதாக என்.எல்.சி போராட்டத்தில் அ.தி.மு.க. எம்.பி. சண்முகம் பேசியுள்ளார்.

  • சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிக்க மூத்த குடிமக்களுக்கு வரும் 21ஆம் தேதி முதல் கட்டணமில்லா டோக்கன் - மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

  • பால், நெய்யைத் தொடர்ந்து வெண்ணெய்யின் விலையும் உயர்வு. 

  • டேபிள், சமையல் வெண்ணெயின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்வு

  • ஆவின் வெண்ணெய் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம். ஆவின் பொருள்களை ஏழைகளுக்கு எட்டாக் கனியாக்கி பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளதாகக் கண்டனம்.

  • புதுச்சேரிக்கு போதிய நிதியின்றி திட்டங்களை நிறைவேற்ற இயலவில்லை. மாநில அந்தஸ்து இல்லாததால் வளர்ச்சி இல்லை - முதலமைச்சர் ரங்கசாமி வேதனை.

  • சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு காலத்தை முன்னிட்டு 17 ஆயிரம் பேர் தங்கஏற்பாடு.


இந்தியா:



  • டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 48ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

  • பல்கலைக்கழங்களில் வேந்தராக இருக்கும் ஆளுநரை நீக்கவேண்டி கேரள சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த 2 அரசுப் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • சீனா போருக்கு தயாராகி வருவதாகவும் மத்திய அரசு தூங்குவதாகவும் விமர்சித்த ராகுல் காந்தியை மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தாக்கிப் பேசியுள்ளார்.


உலகம்:



  • அயர்லாந்து நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வராத்கர் இரண்டாவது முறையாக (டிச. 17) பதவியேற்றார்.

  • மலேசியாவில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.


விளையாட்டு:



  • உலக கோப்பை கால்பந்து: 3-வது இடத்திற்க்கான போட்டியில் குரோஷியா-மொராக்கோ இன்று மோதல்

  • பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மூன்றாவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தினை வென்று உலக சாதனை படைத்துள்ளது.

  • இந்திய-வங்காளதேச அணிக்ளுக்கு இடையிலான முதலாவது டெஸ்டி போட்டியின் 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதில் வங்க தேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறவுள்ளதால், வங்கதேச அணி வெற்றி பெற 241 ரன்கள் தேவைப்படுகிறது.