தமிழ்நாடு:



  • கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர், தஞ்சாவூர், மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை

  • கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

  • வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ளதால், சென்னை, நாகை, கடலூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது; புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும் என தகவல்

  • மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  • ஈரோட்டில் வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பலை பிடிக்க சென்ற வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

  • தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.405.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,644 புதிய குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

  • தேனி - போடி புதிய ரயில் பாதை: ”அதிவேக தொழில்நுட்ப ஆய்வு நடைபெறும் நேரத்தில் பொதுமக்கள் ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம்” என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்தியா:



  • குஜராத், இமாச்சல் சட்டபேராவை தேர்தல் முடிந்ததையொட்டி, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

  • இந்தியாவிலிருந்து நடப்பாண்டில் 9,670 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசி ஏற்றுமதி - மத்திய அரசு தகவல்

  • வெளிநாடு சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்களை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. 

  • ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவு- பதேர்வா, கதுவா, தோடா, உதம்பூர், ஜம்மு, கத்ரா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

  • டெல்லி மாநகராட்சி தேர்தலில் 126 இடங்களை வென்று டெல்லியை  கைப்பற்றியுள்ளது ஆளும் ஆம் ஆத்மி கட்சி.  

  • பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. 

  • நாட்டின் வடக்குப் பகுதிகளில் பனி மூட்டத்தின் போது ரயில்களை சீராக இயக்க இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

  • நாட்டில் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களுக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளில் சி.பி.ஐ. 56 வழக்குகளை பதிவு செய்துள்ளது.

  • இந்தியாவில் 93% கிராமங்களில் மொபைல் போன் வழி இணையதள வசதி ஏற்படுத்தப்படும்: மத்திய அரசு தகவல்

  • கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு மத்திய அரசு ரூ.50 ஆயிரம் வழங்கி வருகிறது என மத்திய அமைச்சர் நித்யானந்தா ராய் தெரிவித்துள்ளார். 


உலகம்:



  • மெட்டாவை தொடர்ந்து, ட்விட்டர், பேஸ்புக், அமேசான் இந்தியாவில் பைஜூஸ் என பல்வேறு நிறுவனங்களும் ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

  • வடகொரியாவில் கிம் ஜாங் உன் ஆட்சியின் கீழ், குறைந்தது 23 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

  • அண்மைக் காலமாக இலங்கையின் பொருளாதாரம் பின்னடைவுக்குச் சென்றுள்ள நிலையில், பொருளாதார சீர்திருத்தங்கள் செய்வது இயலாது என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.


விளையாட்டு:



  • இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம். 

  • உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

  • ப்ரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.