7 AM Headlines : உங்களைச் சுற்றி நடந்த விஷயங்கள் என்ன? 7 மணி தலைப்புச் செய்திகள்!
7 AM Headlines : கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
Continues below advertisement

காலை 7 மணி தலைப்புச்செய்திகள்
தமிழ்நாடு:
Continues below advertisement
- பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பணம் மக்களை சென்றடைய மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு - தமிழக அரசு அதிரடி உத்தரவு
- பருவமழையால் 27 மாவட்டங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட 48, 593 விவசாயிகளுக்கு ரூ.51 கோடி நிவாரணம்- முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு
- தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் பாஜக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது - முதலமைச்சர் முக ஸ்டாலின்
- அதிமுக, பாஜக கூட்டணியிலிருந்து பாமக விலகல்
- 20 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: உள்துறை செயலாளர் பணீந்திரரெட்டி உத்தரவு
- திமுக முன்னாள் எம்பி மஸ்தான் மரண வழக்கு - தம்பி மருமகன் உள்பட 5 பேர் கைது
- புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனை கண்காட்சி: தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர், ஈபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் என அங்கீகரித்தது இந்திய தேர்தல் ஆணையம்- 16ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு
- புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளைக் கண்டறிய ஏ.டி.எஸ்.பி. ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து திருச்சி டி.ஐ.ஜி. சரவணசுந்தர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா:
Just In
"நானும் முருக பக்தன்தான்" திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
சர்ட் இன்றி கார் ஜன்னலில் பயணம்.. தகாத செய்கை செய்த இளைஞர்கள்.. கிழித்து தொங்கவிட்ட இளம்பெண்
”சமஸ்கிருத புழுதி.. பூ சுற்றும் புராணக் கதைகள் அல்ல கீழடி” பாஜகவை வச்சு செஞ்ச விஜய்
"உங்களோட ஒரு முடிவு மக்களோட வாழ்க்கையை மாத்திரும்" யாரை சொல்கிறார் குடியரசு தலைவர் முர்மு?
Villupuram Power Shutdown : விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம்... எந்தெந்த பகுதிகள் தெரியுமா ?
- அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் மரணம்- உலக தலைவர்கள் இரங்கல்
- இமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டதை தொடர்ந்து ரோஹ்தாங் பாதையில் அமைந்துள்ள அடல் சுரங்கப்பாதையின் தெற்கு போர்ட்டல் அருகே 400க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்ற சுற்றுலாப் பயணிகள் சிக்கி தவித்தனர்.
- இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்டதால் 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்த நிலையில் நொய்டா மருந்து நிறுவனத்தில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
- SU-30MKI விமானத்தில் இருந்து கப்பல் இலக்கை நோக்கி வான்வழி ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணையின் அதிக ரேஞ்ச் சாதனையை இந்திய விமானப்படை (IAF) நேற்று முன்தினம் வெற்றிகரமாக சோதனை செய்தது.
உலகம்:
- ஊழல் வழக்கில் மியான்மர் முன்னால் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை.
- இந்தோனேசியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
- கம்போடியாவில் நட்சத்திர ஓட்டல் தீவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
- ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்தப்போவதில்லை என ஐநா தெரிவித்துள்ளது.
- விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஒரு ஆராய்ச்சிக்காக ரூ 15 லட்சம் சம்பளம் வழங்கி அவர்கள் உறங்கவும் சொல்லியிருப்பது ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.
- உலகளவில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருள்களில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுகிறது என ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் வெளியிட்ட உணவு வீண் குறியீட்டு அறிக்கை 2021இல் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு:
- கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக் குறைவால் காலமானார்.
- உத்தரகாண்ட் அடுத்த ரூர்க்கியில் நிகழ்ந்த கார் விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம்
- ரேங்கிங் பேட்மிண்டன் போட்டியில் தமிழக வீரர் ரித்விக் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
- உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி வெள்ளி வென்றார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.