10 PM Headlines: ஒரே நிமிடத்தில் உங்கள் கையில் உலக நடப்புகள்..! இதோ இரவு 10 மணி செய்திகள்..
10 PM Headlines : கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
Continues below advertisement

இன்றைய தலைப்புச் செய்திகள்
தமிழ்நாடு:
Continues below advertisement
-
பா.ம.க. பொதுக்குழுவில் ராமதாஸ் ஒரு நிமிடம் மட்டுமே பேசியது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Just In
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?“தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்சிவகங்கை காவலாளி லாக் அப் மரணம்.. அரசை கேள்விகளால் துளைத்த நீதிபதிகள்.. முழு விவரம்"கொலை செஞ்சது நீங்க.. "SORRY"தான் உங்க பதிலா?" முதல்வரை காட்டமாக விமர்சித்த இபிஎஸ்மிக்சர் சாப்பிடும் தமிழ் ஹீரோக்கள்! பின்னணியில் ரெட் ஜெயண்ட்? திருப்புவனம் லாக்கப் மரணம்26 ஆண்டுகளாக தலைமறைவு.. 7 வெடிகுண்டு வழக்குகள்.. சிக்கிய முக்கிய தீவிரவாதி.. காத்திருந்து பிடித்த தமிழக காவல்துறை - புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளைக் கண்டறிய ஏ.டி.எஸ்.பி. ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து திருச்சி டி.ஐ.ஜி. சரவணசுந்தர் உத்தரவிட்டுள்ளார்.
-
தென்காசி, சேலம், தஞ்சாவூர் 6 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள்.. காவல்துறை உயரதிகாரிகள் 20 பேர் அதிரடி மாற்றம்.
- 4வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
- திமுக முன்னாள் எம்பி மஸ்தான் மரண வழக்கில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
- பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பு என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா:
- பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் காலமானார். தலைவர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
- தாயாரை இழந்த நாளிலும் நாட்டுப் பணி செய்த பிரதமரை கர்மயோகி என பாஜகவினர் பாராட்டி வருகின்றனர்.
-
தாய் இறந்த சோகத்திலும் நாட்டின் 7வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டதை தொடர்ந்து ரோஹ்தாங் பாதையில் அமைந்துள்ள அடல் சுரங்கப்பாதையின் தெற்கு போர்ட்டல் அருகே 400க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்ற சுற்றுலாப் பயணிகள் சிக்கி தவித்தனர்.
- இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்டதால் 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்த நிலையில் நொய்டா மருந்து நிறுவனத்தில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
- SU-30MKI விமானத்தில் இருந்து கப்பல் இலக்கை நோக்கி வான்வழி ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணையின் அதிக ரேஞ்ச் சாதனையை இந்திய விமானப்படை (IAF) நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது.
உலகம்:
- விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஒரு ஆராய்ச்சிக்காக ரூ 15 லட்சம் சம்பளம் வழங்கி அவர்கள் உறங்கவும் சொல்லியிருப்பது ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.
- உலகளவில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருள்களில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுகிறது என ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் வெளியிட்ட உணவு வீண் குறியீட்டு அறிக்கை 2021இல் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு:
- கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக் குறைவால் காலமானார்.
- உத்தரகாண்ட் அடுத்த ரூர்க்கியில் நிகழ்ந்த கார் விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்துள்ளார். கார் தீப்பிடித்து எரிந்ததில் ரிஷப் பண்ட்-க்கு தலை, காலில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்ட் விபத்தில் சிக்கியிருப்பது வேதனை அளிக்கிறது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நலம் பெற நான் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.