தமிழ்நாடு: 



  • நாளை இரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்: மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைக்கு செல்ல தடை

  • உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கும் வகையில் திருச்சியில் அனைத்து வசதிகளுடன் ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும் - முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு

  • பொங்கல் பண்டிக்கைக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில் முன்பதிவு 7 நிமிடத்தில் முடிந்தது.

  • "அண்ணாமலை தலைமையில் பெண்கள் மீது அருவருப்பான தனிநபர் தாக்குதல்" - காயத்ரி ரகுராம் சரமாரி குற்றச்சாட்டு.

  • புதுக்கோட்டை மாவட்டம், இறையூரில் அனைத்து சமூகத்தினரும் கோயிலுக்குச் சென்று நிறைவாக வழிபாடு. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமன், அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்பு.

  • சம ஊதியம் கோரிப் போராடும் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை நடத்திய பேச்சுவார்த்தை  தோல்வியில் முடிந்துள்ளது.

  • பல ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதிய அகவிலைப்படி தொகையை வழங்கக்கோரி வலியுறுத்தல் - சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் கைது.

  • அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கக்கோரி வலியுறுத்தல் - தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் சார்பில் போராட்டம்.

  • புத்தாண்டை முன்னிட்டு நட்சத்திர விடுதிகளில் 80 விழுக்காடு நபர்களுக்கு மட்டுமே அனுமதி

  • ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு 39ஆவது நபர் பலியானதாகவும் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும்  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

  • தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல  கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வறண்ட வானிலையேஇருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்தியா :



  • பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் (100) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

  • இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்தால் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழப்பு - விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

  • கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை: பல ஆவணங்கள், ஆயுதங்கள் சிக்கின

  • ஜார்கண்ட் நடிகை கொலை வழக்கில் கணவர் கைது

  • இந்தியவின் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளை உடைய பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation, டி. ஆர். டி. ஓ)  தெரிவித்துள்ளது.

  • கடந்த இரண்டு நாள்களாக வெளிநாட்டில் இருந்து இந்திய விமான நிலையங்களுக்கு வந்திறங்கிய 39 வெளிநாட்டவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • தனது வணிக சாம்ராஜ்யத்தின் வளர்ச்சியை எந்த ஒரு அரசியல் தலைவருடனும் இணைக்க முடியாது என உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவரான கௌதம் அதானி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


உலகம்:



  • சீனா உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் - ஜனவரி 1 முதல் அமல்

  • கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளில் 18 பேர்  Marion Biotech Private Limited எனும் இந்திய நிறுவனம் தயாரித்த  Doc-1 Max syrup எடுத்துக் கொண்டதால் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • அமெரிக்காவில் பனிப்புயல் மற்றும் வரலாறு காணாத குளிர் நிலவி வரும் நிலையில், உலகின் மிகப்பெரும் நீர்வீழ்ச்சியான நயாகரா நீர்வீழ்ச்சி முற்றிலுமாக உறைந்து போனது.

  • ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்குச் செல்ல, சிறுமிகள் கல்வி பயிலவும் தலிபான் அரசு தடைவிதித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் சில உதவித் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ஐநா கூறியுள்ளது. 


விளையாட்டு:



  • எல்லா காலத்திலும் கால்பந்து வீரர்களில் சிறந்த வீரராகவும், மூன்று முறை ஃபிபா உலகக் கோப்பை வென்ற ஒரே வீரராகவும் அறியப்பட்ட பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82 வயதில் காலமானார்.

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஆண்டின் சிறந்தடி20 வீரராக தேர்வு செய்ய இந்திய அதிரடி பேஸ்ட்மேனான சூர்யகுமார் யாதவ் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

  • இந்தியாவிற்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியை தசுன் ஷனகா கேப்டனாக வழிநடத்த இருக்கிறார்.

  • இன்னிங்ஸ் மற்றும் 182 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா படுதோல்வி: தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா