7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் என்ன நடந்தது..? உலக நிகழ்வுகளை ஒரு நிமிடத்தில் அறிய.. 7 மணி செய்திகள்!
7 AM Headlines : கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
Continues below advertisement

காலை 7 மணி தலைப்புச்செய்திகள்
தமிழ்நாடு:
Continues below advertisement
- நாளை இரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்: மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைக்கு செல்ல தடை
- உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கும் வகையில் திருச்சியில் அனைத்து வசதிகளுடன் ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும் - முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு
- பொங்கல் பண்டிக்கைக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில் முன்பதிவு 7 நிமிடத்தில் முடிந்தது.
- "அண்ணாமலை தலைமையில் பெண்கள் மீது அருவருப்பான தனிநபர் தாக்குதல்" - காயத்ரி ரகுராம் சரமாரி குற்றச்சாட்டு.
- புதுக்கோட்டை மாவட்டம், இறையூரில் அனைத்து சமூகத்தினரும் கோயிலுக்குச் சென்று நிறைவாக வழிபாடு. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமன், அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்பு.
- சம ஊதியம் கோரிப் போராடும் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
- பல ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதிய அகவிலைப்படி தொகையை வழங்கக்கோரி வலியுறுத்தல் - சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் கைது.
- அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கக்கோரி வலியுறுத்தல் - தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் சார்பில் போராட்டம்.
- புத்தாண்டை முன்னிட்டு நட்சத்திர விடுதிகளில் 80 விழுக்காடு நபர்களுக்கு மட்டுமே அனுமதி
- ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு 39ஆவது நபர் பலியானதாகவும் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
- தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வறண்ட வானிலையேஇருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா :
Just In
"நானும் முருக பக்தன்தான்" திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
சர்ட் இன்றி கார் ஜன்னலில் பயணம்.. தகாத செய்கை செய்த இளைஞர்கள்.. கிழித்து தொங்கவிட்ட இளம்பெண்
”சமஸ்கிருத புழுதி.. பூ சுற்றும் புராணக் கதைகள் அல்ல கீழடி” பாஜகவை வச்சு செஞ்ச விஜய்
"உங்களோட ஒரு முடிவு மக்களோட வாழ்க்கையை மாத்திரும்" யாரை சொல்கிறார் குடியரசு தலைவர் முர்மு?
Villupuram Power Shutdown : விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம்... எந்தெந்த பகுதிகள் தெரியுமா ?
- பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் (100) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
- இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்தால் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழப்பு - விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
- கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை: பல ஆவணங்கள், ஆயுதங்கள் சிக்கின
- ஜார்கண்ட் நடிகை கொலை வழக்கில் கணவர் கைது
- இந்தியவின் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளை உடைய பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation, டி. ஆர். டி. ஓ) தெரிவித்துள்ளது.
- கடந்த இரண்டு நாள்களாக வெளிநாட்டில் இருந்து இந்திய விமான நிலையங்களுக்கு வந்திறங்கிய 39 வெளிநாட்டவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தனது வணிக சாம்ராஜ்யத்தின் வளர்ச்சியை எந்த ஒரு அரசியல் தலைவருடனும் இணைக்க முடியாது என உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவரான கௌதம் அதானி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
உலகம்:
- சீனா உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் - ஜனவரி 1 முதல் அமல்
- கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளில் 18 பேர் Marion Biotech Private Limited எனும் இந்திய நிறுவனம் தயாரித்த Doc-1 Max syrup எடுத்துக் கொண்டதால் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- அமெரிக்காவில் பனிப்புயல் மற்றும் வரலாறு காணாத குளிர் நிலவி வரும் நிலையில், உலகின் மிகப்பெரும் நீர்வீழ்ச்சியான நயாகரா நீர்வீழ்ச்சி முற்றிலுமாக உறைந்து போனது.
- ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்குச் செல்ல, சிறுமிகள் கல்வி பயிலவும் தலிபான் அரசு தடைவிதித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் சில உதவித் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ஐநா கூறியுள்ளது.
விளையாட்டு:
- எல்லா காலத்திலும் கால்பந்து வீரர்களில் சிறந்த வீரராகவும், மூன்று முறை ஃபிபா உலகக் கோப்பை வென்ற ஒரே வீரராகவும் அறியப்பட்ட பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82 வயதில் காலமானார்.
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஆண்டின் சிறந்தடி20 வீரராக தேர்வு செய்ய இந்திய அதிரடி பேஸ்ட்மேனான சூர்யகுமார் யாதவ் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவிற்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியை தசுன் ஷனகா கேப்டனாக வழிநடத்த இருக்கிறார்.
- இன்னிங்ஸ் மற்றும் 182 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா படுதோல்வி: தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.