தமிழ்நாடு:



  • மிக்ஜாம் புயல் எச்சரிக்கை - முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் தீவிரம் காட்டும் தமிழ்நாடு அரசு 

  • தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி - இழுத்தடிக்க முயற்சிப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

  • தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் இன்று மழைக்கால மருத்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது

  • திண்டுக்கலில் அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது -  டிசம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் 

  • நீட் தேர்வுக்கு எதிரான இயக்கம் 50 லட்சம் கையெழுத்துகளை பெற்றதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் 

  • சென்னை மெட்ரோவில் ரூ.5 கட்டணத்தில் நாளை பயணிக்கலாம் - மெட்ரோ அடித்தள நாளை முன்னிட்டு சிறப்பு சலுகை

  • சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் இனி திண்டுக்கல், மதுரைக்கு 10 நிமிடங்கள் முன்னதாக செல்லும் என அறிவிப்பு 

  • சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனுக்கு பதவி உயர்வுடன் மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு உத்தரவு 

  • சீமை கருவேல மரங்களை அகற்ற தமிழ்நாடு அரசு திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

  • சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் 150 கிலோ குட்கா பறிமுதல் 

  • வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.26.50 உயர்வு - வியாபாரிகள் கடும் அதிர்ச்சி 

  • கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்


இந்தியா: 



  • துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி 

  • ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டிப்பு 

  • 2023-24 ஆம் நிதியாண்டில் 6வது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியை கடந்த ஜிஎஸ்டி வசூல் 

  • நாளை (டிசம்பர் 3) நடைபெறுவதாக இருந்த மிசோரம் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு 

  • சரக்கு போக்குவரத்து மூலம் மட்டும் கடந்த 8 மாதங்களில் ரூ.2, 319 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் 

  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதம் உண்டியல் காணிக்கை ரூ.108.46 கோடி என தேவஸ்தானம் தகவல் 

  • மணிப்பூரில் வங்கியில் புகுந்து ரூ.18.85 கோடி பணம் கொள்ளை - முகமூடி கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரம் 

  • சபரிமலையில் அரவணை பாயாசம் தயாரிக்க ஏலக்காய் சேர்க்கப்படாது என திருவாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு 

  • ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தலில் நாளை வாக்கு எண்ணிக்கை - ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என பெரும் எதிர்பார்ப்பு 


உலகம்: 



  • துபாயில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே சந்தித்த பிரதர் மோடி - எக்ஸ் வலைதளத்தில் பதிவு

  • 2028 ஆம் ஆண்டின் சர்வதேச காலநிலை உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும் என பிரதமர் மோடி பரிந்துரை 

  • தற்காலிக போர் நிறுத்த காலக்கெடு நிறைவடைந்ததால் காசாவில் மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் 

  • இந்தியாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றது பிரேசில் 

  • ரஷ்யாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை - ஒவ்வொரு பெண்களும் 8 குழந்தைகளை பெற்றுக் கொள்ள அதிபர் புதின் வேண்டுகோள் 


விளையாட்டு:



  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி - 5 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது

  • புரோ கபடி லீக் சீசன் 10 நாளை தொடக்கம் - முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதல் 

  • 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் - மொத்தம் 1,166 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றனர்

  • வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்