தமிழ்நாடு: 



  • தமிழகம் முழுவதும் பொது இடங்களில் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை - தமிழக டிஜிபி உத்தரவு

  • தமிழகத்தில் அரிசி பெறும் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பும் வழங்கப்படும் - முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு

  • குடிநீரில் மனிதக்கழிவு கலந்த தீண்டாமை விவகாரம்- குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என மதுரை கிளை உத்தரவு

  • பாஜகவை வீழ்த்த காங்கிரஸை உள்ளடக்கிய தேசிய கூட்டணி அமைப்பது முக்கியம் - முதலமைச்சர் முக ஸ்டாலின் பேட்டி 

  • ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 15, 000 பணியிடங்களுக்கு தேர்வு - 2023 ம் ஆண்டிற்கான திட்ட அட்டவணை வெளியீடு

  • பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

  • திருச்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்கான முதலமைச்சர் முக ஸ்டாலில் இன்று திருச்சி வருகை


இந்தியா:



  • நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 2.8 லட்சம் கொரோனா தனிமை படுக்கைகள் தயார்- மத்திய அரசு தகவல்

  • ஆந்திராவில் நடைபெற்ற சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • பிரதமர் மோடியின் தாயார் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் 4 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.

  • உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • கடந்த 2 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


உலகம்:



  • பொருளாதார சரிவை மீட்க முயற்சி: எல்லை திறக்க சீனா முடிவு - உலகம் முழுவதும் கொரோனா பரவும் அபாயம்

  • இலங்கை கச்சத்தீவு திருவிழா மார்ச் 3 மற்றும் 4ம் தேதி கொண்டாடப்படும் என நெடுந்தீவு பங்குதந்தை அறிவித்துள்ளார்.

  • உக்ரைன் கெர்சன் நகரின் மீது ரஷிய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

  • சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.


விளையாட்டு:



  • 2036ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தை கேட்க இந்தியா தயாராக உள்ளது என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

  • உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷ்ப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த சவிதா ஸ்ரீ வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 

  • இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இனி இந்தியாவின் டி20 போட்டிகளில் இடம்பெற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. 

  • வங்கதேசத்திற்கு எதிரான வெற்றியின்மூலம் அஸ்வின் மற்றும் ஷ்ரேயாஸ் ஜோடி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளனர்.

  • 2022ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர் விருதுக்கு ஐசிசி 4 வீரர்களின் பெயரை பரிந்துரை செய்துள்ளது.