தமிழ்நாடு



  • எண்ணூரில் உர தொழிற்சாலைக்கு அமோனியா கொண்டு சென்ற குழாயில் கசிவு; காற்றில் கலந்ததால் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள மக்களுக்கு கண் எரிச்சல் பாதிப்பு; 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

  • சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து பிணையில் விடுவிப்பு; பதிவாளர் தங்கவேல், பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் சதிஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு

  • தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி; வழக்கமான மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் நாளை வீடு திரும்புவார் என தேமுதிக அறிவிப்பு

  • நெல்லையில் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு ரூபாய் 6 ஆயிரம் நிவாரணத்திற்கான டோக்கன் விநியோகம்; அதிகம் பாதிப்புக்குள்ளான 12 கிராமங்களுக்கு முதல்கட்டமாக டோக்கன் விநியோகம்

  • மனிதாபிமான அடிப்படையிலேயே தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களைச் சென்று சந்தித்தேன் என பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை விளக்கம்; நிர்வாகத்தில் தலையிடும் நோக்கில் செல்லவில்லை எனவும் பேட்டி

  • திமுகவை விமர்சனம் செய்ய பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு உரிமை இல்லை - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்

  • வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள மத்திய அரசின் நிவாரணம் கட்டாயம் தேவை என முதலமைச்சர் கோரிக்கை; மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் 72 பக்க கோரிக்கை மனுவை அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு


  • வெள்ளத்தால் சேதமடைந்த கோயில்களை சீரமைக்க அறநிலையத்துறை ரூ.5 கோடி ஒதுக்கியுள்ளது.




இந்தியா



  • டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு; இஸ்ரேல் தூதரை அவதூறாக விமர்சிக்கும் கடிதமும் சம்பவ இடத்தில் கண்டெடுப்பு

  • வானிலையை துல்லியமாக கணிக்க கூடுதல் ஆய்வகங்கள் தேவை - மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கருத்து

  • இந்திய கடற்கரையில் வணிகக் கப்பல்மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

  • ராமர் கோவில் திறப்பு விழாவில் நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம் என மார்க்சிஸிட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி திட்டவட்டம்

  • ஜம்மு- காஷ்மீர் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே

  • அசாம் ஹவுகாத்தி ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீர் தீவிபத்து; பயணிகள் யாரும் இல்லாத நிலையில் பெரும் பாதிப்பு தவிர்ப்பு

  • மத்திய நிதி அமைச்சர் பதவி விலகவேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கிக்கு மின்னஞ்சலில் மர்ம நபர் மிரட்டல்


 


விளையாட்டு



  • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்; முதல் நாளில் 59 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் சேர்த்த நிலையில் மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு

  • சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா வீரர் ககிசோ ரபாடா 14வது முறையாக  5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தல்; நேற்று இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்

  • சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய 7வது தென்னாப்பிரிக்கா வீரரானார் ரபாடா