தமிழ்நாடு:



  • பொங்கல் பரிசு தொகுப்பை பெற நாளை முதல் டோக்கன் விநியோகம் - தமிழக அரசு தகவல்

  • திருவொற்றியூர் அருகே கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 4 வாலிபர்கள் மாயம்

  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வு எதிரொலி: தென் மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

  • தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகல கொண்டாட்டம்: தேவாலையங்களில் சிறப்பு பிரார்த்தனை

  • சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளுக்கு 100 சதவீத ஆர்டிபிசிஆர் சோதனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

  • "கலைஞரின் பேரின், முதலமைச்சரின் மகன், மாண்புமிகு அமைச்சர் என எவ்வளவோ பெருமைகள் இருந்தாலும், உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக இருக்க விரும்புகிறேன்." - உதயநிதி ஸ்டாலின்

  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, நாளை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

  • போதைப்‌பொருள்‌ விற்பனையால்‌ தமிழகத்தில்‌ குற்றச்‌ சம்பவங்கள்‌ அதிகரித்து வரும் நிலையில், காவல்‌ நிலைய மரணங்களும் தொடர்ந்து வருவதாக ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

  • கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுடம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. 


இந்தியா:



  • கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்று எச்சரிக்கையாக இருந்தால் பண்டிகை கொண்டாட்டத்துக்கு தடை வராது - பிரதமர் மோடி அறிவிப்பு

  • மகாராஷ்டிரா படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகை தற்கொலை - நடிகர் அதிரடி கைது

  • சீனாவில் நிலவும் தீவிரமான கொரோனா நிலை போல இந்தியாவில் ஏற்படாது என மூத்த விஞ்ஞானியும் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குநருமான வினய் கே நந்திகூரி தெரிவித்துள்ளார்.

  • தங்களது மகள்களையும், தங்கைகளையும் குடிப்பழக்கம் கொண்டவர்களுக்கு, திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என மத்திய இணையமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

  • இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்தால் அதை கையாளும் வகையில் தயார் நிலையில் உள்ளோமா என்பதை உறுதி செய்ய சுகாதார மையங்களில் பயிற்சி சோதனை நடத்த மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.

  • சீனா உள்பட 5 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.


உலகம்:



  • நேபாளத்தின் நாட்டின் புதிய பிரதமராக பிரசாந்தா மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார்.

  • நிலையான, உறுதியான வளர்ச்சிக்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் - சீனா அமைச்சர் அறிவிப்பு

  • சீனாவில் ஜெஜியாங் நகரத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவதாக இ-மெயிலை கண்டுபிடித்த தமிழரான சிவா அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

  • அமெரிக்காவில் வரலாறு காணாத குளிர் புயலில் சிக்கி 18 பேர் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விளையாட்டு:



  • வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் வெற்றி: 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்திய அணி

  • டெஸ்ட் போட்டியின் வெற்றியின் மூலம், இந்தியா மதிப்புமிக்க ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

  • தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் அடுத்த கிரிக்கெட் போட்டியில் இருந்து நீக்கப்படுவார் என காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் கவலை தெரிவித்துள்ளார்.

  • இலங்கை அணிக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் ரோகித்திற்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.