7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் என்ன நடந்தது..? ஒரே நிமிடத்தில் அறிய.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள்!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
Continues below advertisement

காலை 7 மணி தலைப்புச்செய்திகள்
தமிழ்நாடு:
Continues below advertisement
- உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
- காவல் அதிகாரிகளை தாக்கினால் துப்பாக்கியால் சுட தயங்கக் கூடாது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
- பாஜகவில் அண்ணாமலை இணைந்த பிறகுதான் வீடியோ, ஆடியோ கலாசாரம் வந்து பல பெண்கள் பாதிக்கப்பட்டனர் - நடிகை ரகுராம் கதறல்
- ’நம்ம ஸ்கூல்’ ‘நம்ம ஊர் பள்ளித் திட்டத்தை கொச்சைப்படுத்துவதா? எடப்பாடிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்
- தமிழகத்துக்கு மூக்கு வழியே செலுத்தும் தடுப்பூசி வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை
- எடப்பாடி அணியில் இருந்து சிவி சண்முகம் விலகுகிறாரா? கேபி முனுசாமி, ஜெயக்குமார் மீது கடும் திருப்தி
- தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
- திரு உத்தர கோசமங்கை கோயில் திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் ஜனவரி 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- புதிய தொழில் நுட்பத்தை கடைபிடித்து செம்மை நெல் சாகுபடியில் மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.
- பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கு கரும்பை கொள்முதல் செய்யாதது விவசாயிகளுக்கு செய்த மிகப்பெரிய துரோகம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியா:
Just In
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை... தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறியது எதற்காக?
Cuddalore Power Shutdown: கடலூரில் நாளை மின்தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
காலி ரயில் பெட்டியில் நடந்த கொடுமை.. கதறிய பெண்.. கையில் எடுத்த NHRC
காட்டு யானைக்கு பழம் கொடுத்த நபர்... வனத்துறை அதிரடி நடவடிக்கை... முழு விவரம்
ராணுவத் துறையில் புதிய மைல்கல்!ரேடார், ட்ரோன், ஜாமர் சோதனை மையம் ! திரும்பி பார்க்க வைத்த காஞ்சிபுரம்!
- ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை டெல்லியில் நுழைந்தது: கமல்ஹாசன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
- மருத்துவம் தொடர்பான அனைத்து படிப்புகளும் தமிழில் இருக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் பேச்சு
- அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்யுங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
- மகாராஷ்டிராவில் சீரியல் நடிகை துனிஷா ஷர்மா (20) தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பு தளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இரண்டு கொள்ளுப்பேரன்மார்கள் இணைந்து நடக்கும் யாத்திரை. இவர் நேருவின் கொள்ளுப்பேரன். நான் காந்தியின் கொள்ளுப்பேரன் என்று கமல் ஹாசன் பாரத் யாத்திரை பேசியுள்ளார்.
- கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க பள்ளிகளில் 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உலகம்:
- சீன அரசாங்கத்தின் உயர்மட்ட சுகாதார ஆணையத்தின் மதிப்பீடுகளின்படி, ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 3.7 கோடி பேர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள்
- பாகிஸ்தானில் நாடாளுமன்றம் அருகே நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 3 பேர் பலியாகினர்.
- என்ஜிஓ நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை விதிக்கப்படுவதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது.
- எலான் மஸ்க் உத்தரவால் டுவிட்டரில் தற்கொலை தடுப்புக்கான சிறப்பு ஹேஷ்டேக் சேவை நீக்கம்
- துபாயில் சாலை விபத்து ஏற்படுத்தியதற்காக இந்தியருக்கு ரூ.18 லட்சம் அபராதம் விதிப்பு
விளையாட்டு:
- ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.
- பெண்கள் தேசிய குத்துச்சண்டை போட்டி: லோவ்லினா, நிகாத் அரையிறுதிக்கு முன்னேற்றம்
- பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய இடைக்கால தலைமை தேர்வராக முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய அணி 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது 4 விக்கெட் இழப்பிற்கு விளையாடி வருகிறது.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.