தமிழ்நாடு:



  • பிரதமர் மோடிக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

  • தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

  • அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

  • ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்களை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் - அதிமுக தேர்தல் வாக்குறுதி.

  • கொ.ம.தே.க முன்னாள் வேட்பாளர் சூர்யமூர்த்தி மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்.

  • தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலை ஒட்டி இதுவரை நடைபெற்ற சோதனையில் ரூ. 10 கோடி பறிமுதல்.

  • இலங்கை சிறையிலுள்ள தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் அவரது படகுகளை மீட்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

  • தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம்.

  • வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் மதுபான கடைகள் மூட வேண்டும் என உத்தரவு

  • பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு தென்காசியில் மார்ச் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

  • பாஜக சார்பில் நாமக்கல்லில் கே.பி.ராமலிங்கம், விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி.

  • பாமக சார்பில் தருமபுரியில் சௌமியா அன்புமணி, கடலூரில் தங்கர்பச்சான், அரக்கோணத்தில் கே.பாலு போட்டி.

  • விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகர், மத்திய சென்னையில் பார்த்தசாரதி போட்டி 


இந்தியா: 



  • முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி.

  • முதலமைச்சர் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் புகார்.

  • டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

  • நடிகர் சிவராஜ்குமார் நடித்த படங்களுக்கு தேர்தல் முடியும் வரை தடை விதிக்க பாஜக கோரிக்கை.

  • இமாச்சலபிரதேசம்: பாஜகவுக்கு ஆதரவளித்த 3 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர்.

  • மத்திய பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய போஜ்ஷாலா வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை ஆய்வை தொடங்கியது.

  • விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிப்பு. 


உலகம்: 



  • பூடான் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

  • ரஷ்ய இசை நிகழ்ச்சியின்போது துப்பாக்கிச்சூடு தாக்குதல் - 40 பேர் உயிரிழப்பு. 

  • இந்தோனேசியாவில் 6.0 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

  • இந்தியா- பூடான் இடையிலான நட்புறவு புதிய உயரங்களை எட்டட்டும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

  • மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வைத்து அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

  • காசாவில் உடனடியாக போர்நிறுத்தம்: தீர்மானம் கொண்டு வர அமெரிக்க திட்டம். சூடானில் உள்நாட்டு போர்: 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


விளையாட்டு: 



  • ஐபிஎல் 2024ல் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் பஞ்சாப் - டெல்லியும், இரண்டாவது போட்டியில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகளும் மோத இருக்கின்றன.

  • ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

  • ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி.

  • சர்பராஸ் கானின் தந்தைக்கு தார் ஜீப்பை பரிசளித்தார் ஆனந்த் மஹிந்திரா