தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் தொடக்கம்.

  • மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

  • நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

  • குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.

  • அத்தியாவசிய பணியில் உள்ளவர்களுக்கு தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு - தேர்தல் ஆணையம்.

  • மக்களவை தேர்தல் கூட்டணி: அதிமுக - தேமுதிக இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை.

  • பெண்கள் பாதுகாப்பு பற்றி மணிப்பூர் மாநிலத்தில் பேச முடியுமா டி.ஆர். பாலு கேள்வி.

  • அதிமுக கூட்டணி வேட்பாளர்களை 24ம் தேதி அறிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

  • அமமுக, ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இன்று பாஜக தொகுதி உடன்பாடு கையெழுத்தாகிறது.

  • பைக் சாகசம் செய்வோரை சீர்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கருத்து.

  • பழனி கிரிவல பாதையை சுற்றி தடுப்புகளை அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

  • சீமான் தொடர்ந்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி ஆஜராக அவகாசம் அளித்தது உயர்நீதிமன்றம். 


இந்தியா: 



  • தமிழர் பற்றி தவறான பேச்சு - மத்திய அமைச்சர் ஷோபா தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

  • ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவிப்பு.

  • 100 நாள் வேலை திட்டத்தில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.400 நிர்ணயம் செய்யப்படும் - காங்கிரஸ்.

  • பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோவில் மாணவர்கள் பங்கேற்பு - பள்ளி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் ஆணை.

  • பாஜக கூட்டணியுடனான அதிருப்தியால் மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா.

  • நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேச்சு.

  • புதுச்சேரி, தெலங்கானா மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு.

  • அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்து ஓய்வுபெற்ற தரன் ஜித் சாந்து பாஜகவில் இணைந்தார்.

  • கர்நாடகா: பிஜாபூரில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்து சென்ற ரூ.2 கோடி பணம் பறிமுதல் 


உலகம்: 



  • இலங்கையில் 2024க்குள் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பு.

  • ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஒரே நாளில் 214 உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு.

  • காஸாவில் 6 மாதங்களாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 31,819 பேர் உயிரிழப்பு.

  • ஊழல்வாதிகள் கண்டிக்கப்படும் முன் தேர்தல் நடத்தும் திட்டமில்லை - ஜப்பான் பிரதமர் உறுதிபாகி.

  • உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்ந்து தீவிரம் - ரஷ்ய எல்லை பெல்கராடில் இருந்து 9000 சிறுவர்கள் வெளியேற்றம்.

  • காஸாவுக்கு உணவு கொண்டு செல்ல கட்டுப்பாடு - இஸ்ரேலில் போர் உத்தி என ஐ.நா குற்றச்சாட்டு.

  • பாகிஸ்தான் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிபர் சர்தாரி மகள் அசீபா பூட்டோ வேட்புமனுத் தாக்கல். 


விளையாட்டு:



  • ஐ.பி.எல். தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஆர்.சி.பி. அணிக்கு பெயரும், சீருடையும் மாற்றப்பட்டுள்ளது.

  • ஐபிஎல் 2024 சீசனில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து வர்ணனை செய்ய உள்ளார்.

  • பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டியில் இஸ்லாமாபாத் ஆல்ரவுண்டர் டிரஸ்ஸிங் ரூமில் சிகரெட் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • ஐபிஎல் 2024: பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என விராட் கோலி நம்பிக்கை