தமிழ்நாடு:



  • உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடி தந்துள்ளோம்: ஸ்பெயின் தமிழர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

  • ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • எடப்பாடி இல்லாத அதிமுக உருவாகும், இரட்டை இலை சின்னத்தில்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி - ஓ.பன்னீர்செல்வம்

  • தமிழகம் முழுவதும் உள்ள 68 சமூகத்தவர்களுக்கு சீர்மரபு பழங்குடியினர் ஒற்றைச்சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் - அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் துரை வைகோ வலியுறுத்தல்

  • அடையாறு, கூவம் கரையோரங்களில் விரைவில் பொழுதுபோக்கு பூங்கா திறப்பு; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

  • போதைப்பொருள் பறிமுதல் வழக்குகளை கண்காணிக்க இந்தியாவிலேயே முதன்முறையாக அதிகாரிகள் நியமனம்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

  • இமாச்சல பிரதேசத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி, காணாமல் போன அதிமுக மூத்த நிர்வாகி சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இந்தியா: 



  • யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகளின் வினாத் தாள்களை கசிய விடுவோருக்கும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவோருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 

  • ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி

  • அமைச்சர்கள் மீதான வழக்குகளை யார் விசாரிப்பது? உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பொறுப்பு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • மக்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மிக கடுமையாக விமர்சித்தார்.

  • எதிர்க்கட்சியாக ஆற்ற வேண்டிய கடமைகளை செய்யாமல் எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்துவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  • தேர்தல் பரப்புரையில் குழந்தைகளை ஈடுபடுத்த தடை: மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம்

  •  2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லக்னோ சிறையில் 63 கைதிகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 


உலகம்: 



  • சிலியில் காட்டுத்தீ: உயிரிழப்பு எண்ணிக்கை 122 ஆக உயர்வு, நூற்றுக்கணக்கோர் மாயம்.

  • சாதாரண கைதிகளை போல இம்ரான்கான் சிறையில் வேலை செய்ய உத்தரவு.

  • மாலத்தீவில் இருந்து இந்திய படையின் முதல் குழுவினர் அடுத்த மாதம் வெளியேறுவர் - அதிபர் முய்சு.

  • பாகிஸ்தான்: போலீஸ் நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 10 போலீசார் உயிரிழப்பு.

  • ரஷ்ய ஹெலிகாப்டர் பயிற்சியின்போது ஏரியில் விழுந்து விபத்து. 


விளையாட்டு: 



  • ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல் 

  • 106 ரன்கள் வித்தியாசத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி: 2வது டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு பதிலடி

  • ப்ரோ கபடி லீக்: உபி யோதாஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி இன்று களமிறங்குகிறது.

  • ஜனவரி மாதத்திற்கான ஐசிசி-யின் சிறந்த வீரர் விருது - பரிந்துரை பட்டியலில் ஷமர் ஜோசப் பெயர் இடம் பெற்றுள்ளது. 

  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல்: இந்திய அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 52.77 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. 55 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது.