தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.

  • தமிழ்நாட்டில் கொரோன விதிமுறைகள் விலக்கி கொள்ளப்படவில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • மயிலாப்பூர் பகுதியில் 4 அடுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி சவாலாக இருக்கும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

  • பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  • தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  • அதிமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

  • ஒடிசாவில் நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பை தொடரை நேரில் காண முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. 

  • துபாயிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

  • கொண்டாட்டங்களின்போது முகக்கவசம் அணிந்து கொரோனா கட்டுப்பாடுகளுடன் இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமனியன் தெரிவித்துள்ளார்.


இந்தியா:



  • ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் 4 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.

  • பிரதமர் மோடியின் தாயார் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • ஜனநாயகம் மற்றும் அரசமைப்பு சட்டத்தை பாஜக, ஆர்.எஸ்.எஸ் பலவீனப்படுத்துவதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.

  • சைப்ரஸ் குடியரசு மற்றும் ஆஸ்திரிய நாடுகளுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாளை முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 

  • உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • கடந்த 2 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


உலகம்:



  • இலங்கை கச்சத்தீவு திருவிழா மார்ச் 3 மற்றும் 4ம் தேதி கொண்டாடப்படும் என நெடுந்தீவு பங்குதந்தை அறிவித்துள்ளார்.

  • நேபாளத்தில் இன்று அதிகாலை 2 முறை அடுத்தடுத்து ரிக்டர் அளவுகோலில் முறையே 4.7, 5.3 என்ற அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன

  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.50 கோடியாக உயர்வு

  • சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.


விளையாட்டு:



  • இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இனி இந்தியாவின் டி20 போட்டிகளில் இடம்பெற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. 

  • வங்கதேசத்திற்கு எதிரான வெற்றியின்மூலம் அஸ்வின் மற்றும் ஷ்ரேயாஸ் ஜோடி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளனர்.

  • 2022ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர் விருதுக்கு ஐசிசி 4 வீரர்களின் பெயரை பரிந்துரை செய்துள்ளது.