*இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் ஓடாது. வாடகை சேவைக்கு அனுமதி இல்லை. பெட்ரோல் நிலையங்கள் செயல்பட அனுமதி.


*ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது தமிழக அரசு - இறைச்சி மற்றும் மீன், காய்கறிக் கடைகள் திறக்க அனுமதி இல்லை. தியேட்டர்கள், வணிக வளாகங்கள் செயல்படவும் அனுமதி கிடையாது.


*ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின்போது விவசாயப் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை. உணவகங்களில் நேரக் கட்டுப்பாடுகளுடன் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.


*12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு; ஆன்லைன் மூலம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகள் - தமிழக அரசு அறிவிப்பு


*தமிழ்நாட்டில் கடந்த 10 நாள்களில் 2,327 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு - பெற்றோர்கள் அதிர்ச்சி


*தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 10 ஆயிரத்தைத் தாண்டியது. நேற்று ஒரே நாளில் 42 பேர் உயிரிழப்பு.


*வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே2 அன்று ஊரடங்கு இருக்காது - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் 


*கொரோனா வைரசை எதிர்கொள்ளவும், தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் 5 யோசனைகளை வழங்கி பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்


*ஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி.