மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


 


மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டம் வசாயில் உள்ள மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், அங்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனாவுக்கு  சிகிச்சை பெற்று வந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்து ஏற்பட்ட உடனையே மற்ற நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஏசியின் மூலம் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தி விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a >#UPDATE</a> 13 people have died so far in fire at COVID hospital in Virar, in Vasai Virar municipal limits, Palghar district<br><br>(Earlier visuals)<a >#Maharashtra</a> <a >pic.twitter.com/KHTiSqbLMY</a></p>&mdash; ANI (@ANI) <a >April 23, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


 


மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள அரசு மருத்துவமனையில்  நேற்று முன்தினம் வாயு கசிவால் திடீரென ஆக்ஸிஜன் நிறுத்தப்பட்டதால் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.