தமிழ்நாடு:



  • அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

  • தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் தாலுக்கா, திருவள்ளூர் தாலுக்கா, ஊத்துக்கோட்டை தாலுக்கா பகுதிகளுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

  • விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. 

  • செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறப்பு. அடையாறு கரையோர மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை. 

  • தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு மழை பெய்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துவருகிறது. 

  • 2023ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுத் தேதி அட்டவணை போலி என்று சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்து உள்ளது. 

  • ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளை ஆளுநர் கண்டுகொள்ளாத நிலையில், 12 நாட்களில் 4ஆவது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது என்றும் தடை சட்டத்திற்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

  • தமிழ்நாடு முழுவதும் இன்று மற்றும் நாளை தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க. போராட்டம் நடத்த உள்ளது.

  • இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக பொறுப்பேற்ற சுக்வீந்தர் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • படகு பாதிப்பு கணக்கெடுப்பு 2 நாளில் நிறைவடையும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  • கரும்புக்கு ரூ.195 ஊக்கத் தொகையுடன் ரூ.2,950 விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 


இந்தியா:



  • இமாச்சல பிரேதேச முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கும், துணை முதலமைச்சராக முகேஷ் அக்னிஹோத்ரியும் நேற்று பதவியேற்றனர்.

  • சர்வதேச விமான நிலையத்தால் கோவா வளர்ச்சி அடையும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

  • குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்கிறார்.

  • உத்தரப்பிரதேச காவல்துறை அதிகாரிகள், இந்து கடவுள்கள், பிரதமர் கதாபாத்திரத்தை தவறாக சித்தரித்ததாக தாண்டவ் வெப்சீரிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

  • பான் கார்டுடன்  ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

  • மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபங்கர் தத்தாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக மத்திய அரசு நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தகவல்.

  • இந்தியா - ஆஸ்திரேலிய நாடுகள் இணைந்து நடத்திய கூட்டு ராணுவப் பயிற்சி நிறைவு. 


உலகம்:



  • சனி கிரகத்தின் பழைய புகைப்படத்தைப் நாசா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

  • நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் இன்று பூமிக்கு திரும்புகிறது

  • வடக்கு பிரான்சில் ஜெர்சி தீவில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி

  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.88 கோடியாக உயர்ந்துள்ளது.


விளையாட்டு:



  • வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்ததற்கு பிறகு, டெஸ்ட் தொடரை கேஎல் ராகுல் வழிநடத்துவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது அறிவித்துள்ளது. 

  • முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர், FIFA உலகக் கோப்பை 2022-க்கான தீம் பாடல் பின்னணியில் இசையை பதிவிட்டு, அதில், தான் கால்பந்து விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். 

  • உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரின் காலிறுதிப்போட்டியில் பெற்ற வெற்றியை கொண்டாடும்போது, மொராக்கோ மற்றும் பிரான்ஸ் அணிகளின் ரசிகர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

  • சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த நியூசிலாந்தின் மெக்கல்லமின் சாதனையை பென் ஸ்டோக்ஸ் சமன் செய்துள்ளார்.