தமிழ்நாடு:



  • மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து நிவாரணப் பொருடகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 

  • சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள். 

  • மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்த மாண்டஸ் புயல்; இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு

  • பேரிடர், அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு; எந்த மழை வந்தாலும் மக்களைக் காப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி. 

  • சென்னையில் பலத்த காற்றுடன் மழைப்பொழிவு; அதிகபட்சமாக காட்டுபாக்கத்தில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

  • மாண்டஸ் புயலால் சென்னை காசிமேட்டில் 150 படகுகள் சேதம்; 3 படகுகள் கடலில் மூழ்கியது. 

  • மாண்டஸ் புயலால் சென்னையில் 300க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தது. இரவோடு இரவாக அப்புறப்படுத்திய தூய்மைப்பணியாளார்கள். 

  • மாண்டஸ் புயலால் சென்னையில் பல்வேறு சாலையில் மழை நீர் தேக்கம்; சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றது. 

  • புயலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

  • புயல் கரையைக் கடந்ததால் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்துக்கு அனுமதி அளித்த காவல்துறை. 

  • கனமழை எச்சரிக்கை காரணமாக, இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

  • புயல் பாதித்த பகுதிகளில் தடையின்றி பால் விநியோகிக்க அமைச்சர் நாசர் உத்தரவு.

  • புயலால் சென்னைக்கு வரவேண்டிய 4 சர்வதேச விமானங்கள் ரத்து; 13 விமானங்கள் தாமதம்


இந்தியா:



  • ஆளுநர் நியமனம் மற்றும் அதிகாரங்களில் மாற்றம் கொண்டுவர மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்த திமுக, சிபிஎம் உறுப்பினர்கள்.

  • குஜராத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. மீண்டும் பூப்[ஏந்திர பட்டேல் தெர்ந்தெடுக்க வாய்ப்பு. 

  • இமாச்சலத்தில் முதல்வரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் என தீர்மாணம் நிறைவேற்றிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள். 


உலகம்:



  • இந்திய மாணவர்கள் உட்பட இன்னும் 1,190 பேர் உக்ரைனில் உள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல். 

  • உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார் எலான் மஸ்க்.

  • பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி; துறைமுகத்தில் ரூ. 44.47 கோடி இறக்குமதி பொருட்கள் தேக்கம்

  • இந்தோனேசியாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு

  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.77 கோடியாக உயர்ந்துள்ளது.


விளையாட்டு:



  • உலகக்கோப்பை கால் இறுதி ஆட்டத்தில் பலமான பிரேசிலை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்த குரோஷிய அணி, மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்தை பந்தாடிய அர்ஜெண்டினா  அரையிறுதிக்கு முன்னேற்றம். 

  • இந்தியா - வங்காளதேசத்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி தற்போது நடந்து வருகிறது.