முகத்தில் 118 தையல்! பாலியல் வன்கொடுமையை தடுத்த பெண் மீது கொடூர தாக்குதல்!

பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம்சாட்ட மூன்று பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயற்சித்துள்ளனர். அப்போது, அவர்களை தடுத்த நிறுத்த அப்பெண் முயற்சித்துள்ளார்.

Continues below advertisement

மத்தியப் பிரதேசம் போபாலில் ஒரு பெண்ணை கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயற்சித்துள்ளது. அப்போது, பேப்பர் கட்டரை கொண்டு அப்பெண்ணை அவர்கள் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Continues below advertisement

இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?

அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரின் முகத்தில் 118 தையல்கள் போடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் போபால் டிடி நகர் பகுதியில் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து விரிவாக பேசிய காவல்துறையினர், "வெள்ளிக்கிழமையன்று டிடி நகர் ரோஷன்புராவில் உள்ள ஸ்ரீ பேலஸ் ஹோட்டலுக்கு கணவருடன் அப்பெண் சென்றுள்ளார். அப்போது, பைக் நிறுத்துவது தொடர்பாக அவருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ்மதுரை : கீழடி அருங்காட்சியக பணிகள் மே 31-க்குள் நிறைவுபெறும் - அமைச்சர் எ.வ வேலு

கணவர் ஹோட்டலுக்குள் இருந்தபோது, ​​அவர்கள் ஆபாசமான கருத்துக்களை கூறி பெண்ணை நோக்கி விசில் அடித்துள்ளனர். அந்தப் பெண் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் சண்டை போட்டுள்ளார். மேலும் மூன்று ஆண்களில் ஒருவரை அறைந்தார். பின்னர், ஹோட்டலுக்குள் அந்த பெண் சென்றுள்ளார். 

அந்த தம்பதியினர் ஹோட்டலில் இருந்து வெளியே வந்தபோது, ​​​சண்டை போட்டதற்காக பெண் மீது கோபமடைந்த குற்றவாளிகள், பேப்பர் கட்டர் மூலம் அவரைத் தாக்கினர். பின்னர், பெண்ணை அவரது கணவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் பலத்த காயங்களுக்கு சிகிச்சை அளிக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 

இரண்டு குற்றவாளிகளான பாட்ஷா பெக் மற்றும் அஜய்  ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்றாவது குற்றவாளியைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்றுவருகிறது. ஹோட்டலில் உள்ள சிசிடிவியை ஆராய்ந்த பிறகு, குற்றம்சாட்டப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிக்க: IND vs SA, 1st T20 : எனக்கு இது முன்னவே தெரியும்; அதுதான் ட்விட்ஸ்ட்! - இந்தியாவுடனான வெற்றி குறித்து வான்டர் டுசன்

மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று காலை தம்பதியரை நேரில் சந்தித்து மருத்துவ சிகிச்சைக்கு முழு உதவி செய்வதாக உறுதியளித்தார். அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி சவுகான் அவருக்கு 1 லட்சம் ரூபாயை வழங்கினார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement
Sponsored Links by Taboola