தமிழ்நாடு:



  • நெய்வேலி சுற்றுவட்டார பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களை கையகப்படுத்தவுள்ள என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் 2 நாள்கள் நடைபயணம்.

  • கள்ளக்குறிச்சி சங்கராபுரத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே மோதல். பாஜக நிர்வாகிகள் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

  • தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு. சென்னை புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.

  • சென்னை, அடையாறு பூங்காவில்  நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்த பூங்கா ஊழியர்கள், பொதுமக்களுக்கு திமுக கட்சி நிதியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கினார். 

  • புதுக்கோட்டை தீண்டாமை விவகாரம் - இன்று நடக்கவிருந்த சமூக பிரதிநிதிகள் உடனான சமாதானக் கூட்டம் ரத்து.

  • மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படி (HRA) தொடர்பான விதிகளை நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை (DoE) புதுப்பித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட விதிகளின்படி, சில அரசு ஊழியர்களுக்கு சில காரணங்களால் HRA க்கு தகுதி கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஜல்லிக்கட்டு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், ஹால்மார்க் முத்திரை கொண்ட தங்க காசுகள் வழங்குவதாகவும், சாதி பெயர்களை தவிர்த்து மாடுகளை அவிழ்ப்பதாகவும் அமைச்சர் பி.மூர்த்தி உறுதி அளித்தார்.

  • மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள்  நிவாரணதொகை வழங்கும் பணியினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

  • கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரூ.6.75 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட்டு வரும் பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.


இந்தியா:




  • கேரளா, வயநாடு பகுதியில் சுற்றித்திரியும் பிஎம்2 மக்னா யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறை உத்தரவிட்டுள்ளது.




  • சரிந்துகொண்டேயிருக்கும் ஜோஷிமத் நகரத்தில் உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.




  • அனுமதியின்றி இறைச்சி வியாபாரம் செய்ததாக உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சர் யாகூப் குரேஷி கைது செய்யப்பட்டுள்ளார்.



  • ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்ற நபர் டெல்லி காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டார்.


உலகம்:



  • சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவால் அனுப்பப்பட்ட மிகப் பழமையான 38 வயது செயற்கைக்கோள் இந்த வாரம் முதல் விண்ணிலிருந்து மண்ணை நோக்கி விழலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  • அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக குடியரசு கட்சியின் கெவின் மெக்கார்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


விளையாட்டு:










  • சூர்யகுமார் யாதவ் சதத்தால் இந்தியா கடைசி டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது.

  • இந்தியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 11.5 ஓவர்களில் 100 ரன்கள் கடந்துள்ளது.

  • பத்தாவது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான 26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு. இதில் இலக்கியதாசன், சிவசுப்பிரமணியன், ஜெஸ்வின், அல்ட்ரின், பிரவீன் சித்திரவேல், ரோசி மீனா பால்ராஜ், பவித்ரா வெங்கடேஷ் ஆகிய 6 தமிழ்நாடு வீரர் - வீராங்கனைகள் இடம்பிடித்தனர்.

  • இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக சேத்தன் ஷர்மா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.