கடந்த பிப்ரவரி 26ம் தேதி தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தாலும் அறிவித்தார், அரசியல் கட்சிகள் தங்களின் பிரசார பயணத்தை மறுநாளே துவக்கிவிட்டனர். காரணம், மிக குறுகிய காலத்தில் அதற்காக நிர்ணயிக்கப்பட்ட தேதி தான். ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு என்றதும், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வான்வழி சேவையை தான் அனைத்து தலைவர்களும் தேர்வு செய்தனர். தனி விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் என சென்னை விமான நிலையம் முன்பை விட தற்போது பிஸியாக உள்ளது. வருகை, புறப்பாடு என இரு பகுதிகளும் முன்பில்லாத அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது.
15 நாளில் 161 தனி விமானங்கள் இயக்கம்; அனல் பறக்கும்’ தேர்தல் பிரசாரம்
ABP Tamil | 21 Mar 2021 04:37 PM (IST)
தமிழக தேர்தலுக்கு குறுகிய காலம் நிர்ணயம் செய்யப்பட்டதால் பெரும்பாலான தலைவர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடந்த 15 நாளில் சென்னையிலிருந்து 161 தனி விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
chennai_airport
Published at: 21 Mar 2021 04:37 PM (IST)